Breaking Newsசாலை விபத்து இறப்புகளை 50 சதவீதத்தால் குறைக்க திட்டம்

சாலை விபத்து இறப்புகளை 50 சதவீதத்தால் குறைக்க திட்டம்

-

2030ஆம் ஆண்டில் சாலை விபத்துக்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஐம்பது சதவீதம் குறைப்பதே இலக்கு என்று ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.

அந்த நோக்கத்திற்காக மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துகளைக் குறைக்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா ஆட்டோ மொபில் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிராட்லி கூறுகிறார்.

குறிப்பாக அங்கு மருத்துவர்களின் கருத்துக்கள் முக்கியமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாலை விபத்துகளில் கவனம் செலுத்தும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மார்க் ஸ்டீவன்சன், அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்கு வேகமே காரணம் என்கிறார்.

சுமார் ஆயிரம் சாரதிகளின் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், வேகத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கிய போதும் அது நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன ஓட்டிகளின் வேகம், களைப்பு, மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.

அவற்றைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலக்குகளை அடைய முடியும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...