Newsபண்டிகை காலங்களில் அதிகரித்துவரும் திருட்டுக்கள்

பண்டிகை காலங்களில் அதிகரித்துவரும் திருட்டுக்கள்

-

அவுஸ்திரேலியாவில் பண்டிகைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, நத்தார் காலத்தில் திருட்டுச் சம்பவங்கள் இருபது வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது தமது சொத்துக்களை பத்திரமாகப் பூட்டி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பண்டிகை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவு பயணங்களை மேற்கொள்வதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களை திருடர்கள் மிகவும் கவனமாக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டை விட்டு வெளியேறும்போது முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இதேவேளை, கடந்த 12 மாதங்களில் 2300க்கும் அதிகமான வீடு திருட்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நகைகள், பணம் மற்றும் மொபைல் போன்கள் மிகவும் பிரபலமான திருடப்பட்ட பொருட்களாக பெயரிடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக மக்கள் தங்களுடைய பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...