Newsபண்டிகை காலங்களில் அதிகரித்துவரும் திருட்டுக்கள்

பண்டிகை காலங்களில் அதிகரித்துவரும் திருட்டுக்கள்

-

அவுஸ்திரேலியாவில் பண்டிகைக் காலங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, நத்தார் காலத்தில் திருட்டுச் சம்பவங்கள் இருபது வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது தமது சொத்துக்களை பத்திரமாகப் பூட்டி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பண்டிகை விடுமுறை நாட்களில் மக்கள் அதிகளவு பயணங்களை மேற்கொள்வதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களை திருடர்கள் மிகவும் கவனமாக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டை விட்டு வெளியேறும்போது முறையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடுவது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இதேவேளை, கடந்த 12 மாதங்களில் 2300க்கும் அதிகமான வீடு திருட்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நகைகள், பணம் மற்றும் மொபைல் போன்கள் மிகவும் பிரபலமான திருடப்பட்ட பொருட்களாக பெயரிடப்பட்டுள்ளன.

இதன்காரணமாக மக்கள் தங்களுடைய பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...