Newsஅவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காலிக உள்துறை அமைச்சரின் திட்டம்

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காலிக உள்துறை அமைச்சரின் திட்டம்

-

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தற்காலிக உள்துறை அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் இரு அவுஸ்திரேலியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் ஹிஸ்புல்லாஹ் செயற்பாட்டாளர் என தெரியவந்துள்ளமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

இதன்படி அவுஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புகொள்ளும் சாத்தியம் காணப்படுவதாகவும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களுக்கான திட்டங்களை தயார் செய்ய முடியும் எனவும் பாதுகாப்பு ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிலும் தாக்குதல்கள் நிகழலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலைமையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினருடன் நெருக்கமாக செயற்படவுள்ளதாக பதில் உள்ளக அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...