Newsலெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகன் பலி

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகன் பலி

-

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவுஸ்திரேலிய குடிமகனுடன் சேர்த்து மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இஸ்ரேல்-காசா போர் தொடங்கியதில் இருந்தே துப்பாக்கிச்சூடு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு லெபனான் எல்லைப்பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

பின்ட் ஜபெய்ல் (Bint Jbeil) நகரில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் ஆயுதக்குழு கூறியுள்ளது.

மேலும் பலியானவர்கள் குறித்து தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மூவரும் அலி பாஸி, அவரது சகோதரர் இப்ராஹிம் மற்றும் ஷூரூக் ஹம்மூத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் இப்ராஹிம் பாஸி ஒரு அவுஸ்திரேலிய குடிமகன் என்றும், அவர் ஒரு வாரத்திற்கு முன்பு லெபனான் வந்திருந்தார் என்றும் AFP ஊடகத்திடம் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் பலியான அலி பாஸி தமது போராளிகளில் ஒருவர் என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது. தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்ததுடன், இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதனர்.

இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையேயான சமீபத்திய வன்முறைகள் பெரும்பாலும் எல்லைப் பகுதியில் மட்டுமே உள்ளது.

ஆனாலும், லெபனான் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. போர் தொடங்கியதில் இருந்து லெபனான் தரப்பில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலோர் ஹிஸ்புல்லா போராளிகள். ஆனால் ஒரு டசனுக்கும் அதிகமானோர் பொதுமக்கள் மற்றும் மூவர் பத்திரிகையாளர்கள் ஆவர்.

Latest news

காஸாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை...

ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதக் குறைப்பு குறித்த கருத்துகள்

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...

முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ள விக்டோரியன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும். ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை உற்பத்தி செய்துள்ள ஆஸ்திரேலியா

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை (marbled meat) ஆஸ்திரேலியா தயாரித்துள்ளது. இது நியூ சவுத் வேல்ஸில் உள்ள விவசாயிகள் குழுவால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோகிராம்...

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை உற்பத்தி செய்துள்ள ஆஸ்திரேலியா

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை (marbled meat) ஆஸ்திரேலியா தயாரித்துள்ளது. இது நியூ சவுத் வேல்ஸில் உள்ள விவசாயிகள் குழுவால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோகிராம்...

Shopping-ஐ மேலும் எளிதாக்கும் Amazon Australia

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக Amazon Afterpay-உடன் கூட்டு சேர்ந்துள்ளது. Buy Now, Pay Later சேவையைப் பயன்படுத்தி Amazon வலைத்தளம் மற்றும் செயலியில் பொருட்களை வாங்குவதை...