Sportsஅவுஸ்திரேலியாவில் 'பிங்க்' டெஸ்ட் போட்டி

அவுஸ்திரேலியாவில் ‘பிங்க்’ டெஸ்ட் போட்டி

-

பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை சிட்னியில் நடைபெற உள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி ‘பிங்க் டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.

போட்டியின் போது மைதானத்தைச் சுற்றியுள்ள தடுப்புகள் மற்றும் அடையாளங்கள், நடுவில் உள்ள விக்கெட்கள் உட்பட அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதோடு அவுஸ்திரேலிய வீரர்கள் பிங்க் தொப்பி அணிந்திருப்பார்கள்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே பிங்க் டெஸ்டின் நோக்கமாகும். முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் புற்று நோயால் மரணமானார். 2005 இல் மெக்ராத் தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மெக்ராத் அறக்கட்டளையைத் தொடங்கினார்.

இந்த அறக்கட்டளை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக நிதி சேகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...