Newsதங்கச் சுரங்கத்தின் மீது வாழும் மக்கள்

தங்கச் சுரங்கத்தின் மீது வாழும் மக்கள்

-

பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த நகரத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த நகரமானது 5,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகிறது.

இதனால், இந்த லா ரின்கோனாடா நகரமானது விண்வெளிக்கு மிக அருகில் உள்ள நகரம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இங்கு குளிராகவும், சராசரி வெப்பநிலை மைனஸிலும் இருக்கிறது.

இந்த நகரத்தில் சுமார் 60,000 மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிக சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதுண்டு.

ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள இந்த லா ரின்கோனாடா நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன. சட்டப்படி இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை என்றாலும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக தோண்டுகின்றன.

இங்குள்ள ஆண்கள் தங்கச் சுரங்கங்களில் பணிபுரிகின்றனர், பெண்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைத் துண்டுகளுக்கு இடையே தங்கத் துகள்களைத் தேடி எடுக்கின்றனர்.

இங்குள்ள ஊழியர்கள் 30 நாட்கள் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்து, 31 -ம் திகதி சுரங்கத்தில் இருந்து அவ்வளவு தாதுவையும் எடுக்க அனுமதிக்கின்றனர்.

அவர்கள் அந்த தாதுவில் இருந்து எதனை பிரித்தாலும் அது அவர்களுடையது. ஆனால், சில ஊழியர்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் தூக்கி எறியப்படுகின்றனர். இங்கு வரியும் இல்லை, நிர்வாகமும் இல்லை.

முக்கியமாக இந்த நகரத்தில் சாதாரண பகுதிகளுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. அங்கு வசிப்பவர்கள் அதனை பழகிவிட்டனர். வெளியில் இருந்து யாராவது வந்தால் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

Latest news

ஆஸ்திரேலியாவின் பன்முக கலாச்சார சமூகங்களுக்கு அல்பானீஸ் முறையீடு

உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் தற்போது நிகழும் இன மற்றும் மத மோதல்களைப் போல ஆஸ்திரேலியாவில் பல கலாச்சார சமூகங்கள் உருவாக்க வேண்டாம் என்று பிரதமர்...

குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பற்றி நற்செய்தி

மத்திய அரசு, ஓய்வூதிய வரி விதிகளில் பல முக்கிய மாற்றங்களுடன் புதிய கொள்கைகளின் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்தப் புதிய முடிவின் கீழ், அடையப்படாத ஆதாயங்களுக்கு வரி விதிக்கும்...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றம்

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட Fiji நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டதை அடுத்து பெரும் சர்ச்சை...

கிராமப்புறங்களில் அதிகரித்துள்ள மகப்பேறுக்கு முந்தைய இறப்புகள்

"Pink Elephants" என்ற அறிக்கை, நகரங்களில் உள்ள பெண்களை விட ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய இறப்பு ஆபத்து 60% அதிகம் என்பதைக்...

கிராமப்புறங்களில் அதிகரித்துள்ள மகப்பேறுக்கு முந்தைய இறப்புகள்

"Pink Elephants" என்ற அறிக்கை, நகரங்களில் உள்ள பெண்களை விட ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவத்திற்கு முந்தைய இறப்பு ஆபத்து 60% அதிகம் என்பதைக்...

ஆஸ்திரேலிய ஆண்களில் 28% பேர் கழிப்பறைக்குச் சென்ற பிறகு கைகளைக் கழுவுவதில்லை!

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளைக் கழுவுவதில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பு தகவல் கவுன்சில் நடத்திய ஆய்வின் மூலம் இந்த...