Newsதங்கச் சுரங்கத்தின் மீது வாழும் மக்கள்

தங்கச் சுரங்கத்தின் மீது வாழும் மக்கள்

-

பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த நகரத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த நகரமானது 5,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகிறது.

இதனால், இந்த லா ரின்கோனாடா நகரமானது விண்வெளிக்கு மிக அருகில் உள்ள நகரம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இங்கு குளிராகவும், சராசரி வெப்பநிலை மைனஸிலும் இருக்கிறது.

இந்த நகரத்தில் சுமார் 60,000 மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிக சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதுண்டு.

ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள இந்த லா ரின்கோனாடா நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன. சட்டப்படி இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை என்றாலும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக தோண்டுகின்றன.

இங்குள்ள ஆண்கள் தங்கச் சுரங்கங்களில் பணிபுரிகின்றனர், பெண்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைத் துண்டுகளுக்கு இடையே தங்கத் துகள்களைத் தேடி எடுக்கின்றனர்.

இங்குள்ள ஊழியர்கள் 30 நாட்கள் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்து, 31 -ம் திகதி சுரங்கத்தில் இருந்து அவ்வளவு தாதுவையும் எடுக்க அனுமதிக்கின்றனர்.

அவர்கள் அந்த தாதுவில் இருந்து எதனை பிரித்தாலும் அது அவர்களுடையது. ஆனால், சில ஊழியர்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் தூக்கி எறியப்படுகின்றனர். இங்கு வரியும் இல்லை, நிர்வாகமும் இல்லை.

முக்கியமாக இந்த நகரத்தில் சாதாரண பகுதிகளுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. அங்கு வசிப்பவர்கள் அதனை பழகிவிட்டனர். வெளியில் இருந்து யாராவது வந்தால் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 50 சர்வதேச குற்றவாளிகள்

10 நாடுகளில் ஏராளமான குற்றங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு...

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி

இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ரோஜர்...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வேலைகளில் உதவாத ஆண்கள் – சமீபத்திய வெளிப்பாடு

ஆஸ்திரேலியாவில் ஆண்கள் இன்னும் வீட்டு வேலைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியப் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளைச் செய்வதில்...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...

மீண்டும் சேவையை தொடங்குகின்றன குயின்ஸ்லாந்து விமானங்கள்

குயின்ஸ்லாந்து விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பிரிஸ்பேர்ண் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இன்னும் ரத்து...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...