Newsதங்கச் சுரங்கத்தின் மீது வாழும் மக்கள்

தங்கச் சுரங்கத்தின் மீது வாழும் மக்கள்

-

பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த நகரத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

தென் அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள லா ரின்கோனாடா நகரத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த நகரமானது 5,500 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் இருப்பதால் உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகிறது.

இதனால், இந்த லா ரின்கோனாடா நகரமானது விண்வெளிக்கு மிக அருகில் உள்ள நகரம் எனவும் கூறப்படுகிறது. மேலும், இங்கு குளிராகவும், சராசரி வெப்பநிலை மைனஸிலும் இருக்கிறது.

இந்த நகரத்தில் சுமார் 60,000 மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிக சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதுண்டு.

ஆண்டெஸ் மலையில் அமைந்துள்ள இந்த லா ரின்கோனாடா நகருக்கு அடியில் பல தங்கச் சுரங்கங்கள் உள்ளன. சட்டப்படி இங்கு சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி இல்லை என்றாலும் பல நிறுவனங்கள் சட்டவிரோதமாக தோண்டுகின்றன.

இங்குள்ள ஆண்கள் தங்கச் சுரங்கங்களில் பணிபுரிகின்றனர், பெண்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் பாறைத் துண்டுகளுக்கு இடையே தங்கத் துகள்களைத் தேடி எடுக்கின்றனர்.

இங்குள்ள ஊழியர்கள் 30 நாட்கள் ஊதியம் இல்லாமல் வேலை பார்த்து, 31 -ம் திகதி சுரங்கத்தில் இருந்து அவ்வளவு தாதுவையும் எடுக்க அனுமதிக்கின்றனர்.

அவர்கள் அந்த தாதுவில் இருந்து எதனை பிரித்தாலும் அது அவர்களுடையது. ஆனால், சில ஊழியர்களிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் தூக்கி எறியப்படுகின்றனர். இங்கு வரியும் இல்லை, நிர்வாகமும் இல்லை.

முக்கியமாக இந்த நகரத்தில் சாதாரண பகுதிகளுடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் ஆக்சிஜன் மட்டுமே உள்ளது. அங்கு வசிப்பவர்கள் அதனை பழகிவிட்டனர். வெளியில் இருந்து யாராவது வந்தால் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...