Newsஅகதிகள் பிரச்சனையை தீர்க்க பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும்

அகதிகள் பிரச்சனையை தீர்க்க பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும்

-

அகதிகள் பிரச்சனையை தீர்க்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட வேண்டியிருக்கும் என நம்பப்படுகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, மாதந்தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக நுழைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானம் செலுத்தும் குடிவரவுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி அப்துல் ரிஸ்வி, நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தீவிரமான தலையீடு தேவை என்று கூறுகிறார்.

அகதிகள் தொடர்பான புதிய நடைமுறைகளைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் 160 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய போதிலும் அது போதுமானதாக இல்லை என்பது முன்னாள் அதிகாரியின் கருத்து.

விசா வழங்குதல் மற்றும் புகலிடக் கோரிக்கைகளை விசாரிப்பது முறைப்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கொள்கைப் பிரச்சினைகள் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் நாட்டிற்குள் பொய்யாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் குழப்பமோ அல்லது மோதலோ இல்லை என்பதை தரவு உறுதிப்படுத்துகிறது.

எனவே அவர்களை அகதிகளாக நடத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னைய கூட்டு அரசாங்கத்தின் கவனக்குறைவு காரணமாக அகதிகள் பிரச்சினை அதிகரித்துள்ளதாக குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நடைமுறைகளை பின்பற்றத் தவறியமையும் விசா நடைமுறையில் உள்ள பலவீனமே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

Bondi தாக்குதலுக்குப் பின் யூத வழிபாட்டுத் தலங்களில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

சிட்னி நகரில் உள்ள Bondi கடற்கரையில் கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் எதிரொலியாக, பிரித்தானியா முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. Bondi...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

Triple Zero-ஐ போல அவசர சேவை விநியோகத்தை மேம்படுத்த AI தயார்

Triple Zero ஆஸ்திரேலியர்கள் அவசர அழைப்புகளில் AI ஐப் பயன்படுத்த ஆர்வமாக உள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அவசரகால சேவை பதில்களை மேம்படுத்துவதற்காக பெரும்பாலானவர்கள்...

அடிலெய்டில் பெண் ஒருவரை கொலை செய்த நபர்

அடிலெய்டின் parklands-இல் ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக 37 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்து அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி...