Newsஅகதிகள் பிரச்சனையை தீர்க்க பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும்

அகதிகள் பிரச்சனையை தீர்க்க பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும்

-

அகதிகள் பிரச்சனையை தீர்க்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட வேண்டியிருக்கும் என நம்பப்படுகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, மாதந்தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக நுழைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானம் செலுத்தும் குடிவரவுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி அப்துல் ரிஸ்வி, நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தீவிரமான தலையீடு தேவை என்று கூறுகிறார்.

அகதிகள் தொடர்பான புதிய நடைமுறைகளைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் 160 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய போதிலும் அது போதுமானதாக இல்லை என்பது முன்னாள் அதிகாரியின் கருத்து.

விசா வழங்குதல் மற்றும் புகலிடக் கோரிக்கைகளை விசாரிப்பது முறைப்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கொள்கைப் பிரச்சினைகள் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் நாட்டிற்குள் பொய்யாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் குழப்பமோ அல்லது மோதலோ இல்லை என்பதை தரவு உறுதிப்படுத்துகிறது.

எனவே அவர்களை அகதிகளாக நடத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னைய கூட்டு அரசாங்கத்தின் கவனக்குறைவு காரணமாக அகதிகள் பிரச்சினை அதிகரித்துள்ளதாக குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நடைமுறைகளை பின்பற்றத் தவறியமையும் விசா நடைமுறையில் உள்ள பலவீனமே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

காற்றாலை விபத்துக்குப் பிறகு மேம்பாலம் ஒரு வருடத்திற்கு மூடப்படலாம் என அச்சம்

நேற்று இடம்பெற்ற காற்றாலை விசையாழியின் ஒரு பகுதி சிக்கிக்கொண்ட விபத்தால், குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலை மேம்பாலம் ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை...

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

பிரிஸ்பேர்ணில் வீட்டிற்குள் இறந்து கிடந்த தாய் – கணவர், மைத்துனர் மீது கொலைக் குற்றம்

பிரிஸ்பேர்ணுக்கு தெற்கே உள்ள Ipswich-ல் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு ஒரு இளம் பெண் இறந்ததை அடுத்து, இரண்டு ஆண்கள் மீது கொலைக் குற்றம்...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...