Newsஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்போது பல்பொருள் அங்காடிகளுக்கு என்ன நடக்கும்?

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்போது பல்பொருள் அங்காடிகளுக்கு என்ன நடக்கும்?

-

வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பல்பொருள் அங்காடிகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இது தொடர்பில் அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், பல்பொருள் அங்காடிகள் லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக நுகர்வோர் மீது அழுத்தம் கொடுக்கின்றன.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசின் 23 பில்லியன் டாலர் வாழ்க்கைச் செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் மின் கட்டண விலை, குழந்தை பராமரிப்பு செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பல்பொருள் அங்காடிகள் தொடர்பான செனட் சபை விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் அசாதாரண விலை உயர்வுகள் எதிர்காலத்தில் கண்காணிக்கப்படும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...