Newsஅத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்போது பல்பொருள் அங்காடிகளுக்கு என்ன நடக்கும்?

அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும்போது பல்பொருள் அங்காடிகளுக்கு என்ன நடக்கும்?

-

வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாக்குப் பிடிக்க முடியாத வகையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் பல்பொருள் அங்காடி உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பல்பொருள் அங்காடிகள் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

இது தொடர்பில் அவுஸ்திரேலிய நுகர்வோர் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், பல்பொருள் அங்காடிகள் லாபம் ஈட்டும் நோக்கத்திற்காக நுகர்வோர் மீது அழுத்தம் கொடுக்கின்றன.

மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய அரசின் 23 பில்லியன் டாலர் வாழ்க்கைச் செலவுத் திட்டத்தின்படி எதிர்காலத்தில் மின் கட்டண விலை, குழந்தை பராமரிப்பு செலவு, வீட்டு வாடகை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பல்பொருள் அங்காடிகள் தொடர்பான செனட் சபை விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் அசாதாரண விலை உயர்வுகள் எதிர்காலத்தில் கண்காணிக்கப்படும்.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...