Newsமனிதனின் நிலவுப்பயணம் தாமதமாகும் நிலையில்

மனிதனின் நிலவுப்பயணம் தாமதமாகும் நிலையில்

-

கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதல் காலடியை வைத்தார்.

இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தொடங்கியுள்ளது.

2024ஆம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என்று நாசா தெரிவித்ததையடுத்து இதன் முதல்கட்ட விண்கலத்தையும் ஏவி சோதனை செய்தது.

இந்த நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026ஆம் ஆண்டு வரை தள்ளி வைக்கப்படுவதாக நாசா அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிலவை சுற்றி வர விண்வெளி வீரர்கள் 4 பேரை அனுப்ப நாசா திட்டமிட்டிருந்தது.

ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அந்த விண்கலம் ஏவப்படுவது அடுத்த ஆண்டுக்கு தாமதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்புவது 2026ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

வீட்டுவசதி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் விலங்கு நலனுக்காக $4 மில்லியன்

நாய் பந்தயங்களை நடத்தும் Bundaberg greyhound பாதையை மேம்படுத்துவதற்கு 4 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் Tim Mander  அறிவித்தார். 3 மாத காலத்திற்குள் 42 நாய்கள்...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...

நிவாரணம் கோரும் விக்டோரிய விவசாயிகள்

விக்டோரியா மாநில விவசாயிகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Metcalfe பகுதியிலும், பல பிராந்தியங்களிலும் உள்ள விவசாயிகள் குடிநீர் பற்றாக்குறையால் பல...

விக்டோரியாவில் தீ விபத்தில் நாசமான பிரபலமான ஹோட்டல்

விக்டோரியாவில் உள்ள பிரபலமான ஹோட்டலான Churchill ஹோட்டலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து முற்றிலுமாக நாசமானது. இந்த தீ விபத்து காரணமாக நகரம் முழுவதும் அதிக...