Newsவட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய வசதி

வட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய வசதி

-

மெட்டா நிறுவனம் வட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய விசயங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

அதன்படி, பல வண்ணங்களுடன் புதிய தீம்களுக்கான வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பச்சை, நீலம், வெண்மை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய 5 வண்ணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

பயனாளர்கள் அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அவர்களுடைய செயலியில் காணப்படும் வண்ணத்தில் இருந்து தேவையான வண்ணத்திற்கு மாற்றி கொள்ளலாம்.

இந்த புதிய மாற்றங்களால், பின்னணி பார்ப்பதற்கு வண்ண மயத்துடன் இருக்கும். பார்வை குறைபாடு உள்ளவர்கள் அல்லது குறிப்பிட்ட வண்ணங்களை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக இவ்வசதி அமையும்.

மேலும், ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட சாட்டிங் வரலாறு ஆகியவற்றை இலவச கூகுள் டிரைவ் சேமிப்பு பகுதியில் வைத்து கொள்ளும் வசதியை முடிவுக்கு கொண்டு வர வட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

இதனால் கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் வட்ஸ்அப் தரவுகள், 15 ஜி.பி. என்ற சேமிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்படும் அல்லது பயனாளர்கள், கூகுள் ஒன் சந்தாதாரர்களாகும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.

நன்றி தமிழன்

Latest news

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில்...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...

போப் லியோவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் அல்பானீஸ்

போப் லியோ XIV பதவியேற்பு நாளான நேற்று உலகின் பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்கும் ஒரு புனிதமான நாளாக மாறியுள்ளது. வத்திக்கானில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் ஏராளமான...

மெல்பேர்ணில் ஒருவரை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டிய கும்பல்

மெல்பேர்ணைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்குள் நுழைந்த ஆயுதமேந்திய குண்டர்கள் தன்னைச் சுடப் போவதாக மிரட்டியதால் ஏற்பட்ட பயங்கரத்தைப் பற்றி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம்...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...