Newsதேர்தலின் பின் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக்கட்சிக்கும்

தேர்தலின் பின் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக்கட்சிக்கும்

-

தமிழரசுக்கட்சிக்கான தலைமை பதவிக்கான தேர்தலின் பின்னர் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக் கட்சிக்கும் ஏற்படும் என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் தலைமை பதவிக்கான போட்டி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக மும்முனைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழ்த்தேசிய நீக்கத்தை தமிழ்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் பட்சத்தில் 2003 ஆம் ஆண்டு ஆனந்த சங்கரி விடுதலைக்கூட்டணியோடு தனியே சென்றதினைப் போன்று மீண்டும் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்காத இந்த சந்தர்ப்பத்தில் ஈழத்தமிழ் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் இவ்வாறான அரசியல் போட்டிகளுக்கு செல்லக்கூடாது என்றும், இந்த போட்டிகள் தமிழர்கள் மத்தியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...