Breaking Newsவேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள விக்டோரியா வி-லைன் ரயில் ஊழியர்கள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள விக்டோரியா வி-லைன் ரயில் ஊழியர்கள்

-

விக்டோரியா வி-லைன் ரயில் ஊழியர்கள் பல வேலை நிலைமைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக ஜனவரி 25 அன்று 4 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

புகையிரத அதிகார சபையுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த டிசம்பர் 13ஆம் திகதி அதிகாலை 03 மணி முதல் 07 மணி வரையில் ஊழியர்கள் தமது கடமைகளை விட்டு விலகி முதன்முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வி-லைன் ஊழியர்கள், ரயில் உதவியாளர்கள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மெல்போர்னில் உள்ள அனைத்து முக்கிய ரயில் பயணங்களும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வி-லைன் தொழிலாளர்கள், நான்கு வருட காலத்திற்குள் 17 சதவீத ஊதிய உயர்வு மற்றும் வேலைப் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ரயில்வே அதிகாரசபை இதுவரை அறிவிக்கவில்லை.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...