Breaking Newsவேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள விக்டோரியா வி-லைன் ரயில் ஊழியர்கள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள விக்டோரியா வி-லைன் ரயில் ஊழியர்கள்

-

விக்டோரியா வி-லைன் ரயில் ஊழியர்கள் பல வேலை நிலைமைகள் தொடர்பாக இரண்டாவது முறையாக ஜனவரி 25 அன்று 4 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

புகையிரத அதிகார சபையுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த டிசம்பர் 13ஆம் திகதி அதிகாலை 03 மணி முதல் 07 மணி வரையில் ஊழியர்கள் தமது கடமைகளை விட்டு விலகி முதன்முறையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வி-லைன் ஊழியர்கள், ரயில் உதவியாளர்கள், ரயில் கட்டுப்பாட்டாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மெல்போர்னில் உள்ள அனைத்து முக்கிய ரயில் பயணங்களும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வி-லைன் தொழிலாளர்கள், நான்கு வருட காலத்திற்குள் 17 சதவீத ஊதிய உயர்வு மற்றும் வேலைப் பாதுகாப்பிற்கு உறுதியளிக்க வேண்டும் என்று கோருகின்றனர்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை ரயில்வே அதிகாரசபை இதுவரை அறிவிக்கவில்லை.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...