Newsகடும் குளிரால் முடங்கும் அமெரிக்கா

கடும் குளிரால் முடங்கும் அமெரிக்கா

-

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் -30° செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

85 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு நேற்று(16) மின்சாரம் தடைப்பட்டுள்ளது. போர்ட்லாண்ட் அதிகாரிகள் உறைபனி நிலவுவதால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாலை வழியாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பனிப்பொழிவால் உறைபனி உருவாகியுள்ளதாகவும் அதன் கனத்தால் மரங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் சேதமடைந்து விழுவதற்கான அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை, விளையாட்டுப் போட்டிகள், ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரை அனைத்தும் குளிரால் பாதிப்படைந்துள்ளது.

சிகாகோ, போர்ட்லாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்று(16) விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் அமைப்பு 2,900க்கும் அதிகமான விமான பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம்(15) தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் மத்தியில் வெப்பநிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய குளிர் அலை ஒன்று வடக்கு மற்றும் மத்தியமேற்கு பகுதி வழியாக வாரக் கடைசியில் தெற்கு நோக்கி செல்லும் எனக் கணிக்கப்படுகிறது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...