Newsகடும் குளிரால் முடங்கும் அமெரிக்கா

கடும் குளிரால் முடங்கும் அமெரிக்கா

-

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் -30° செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளது.

85 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு நேற்று(16) மின்சாரம் தடைப்பட்டுள்ளது. போர்ட்லாண்ட் அதிகாரிகள் உறைபனி நிலவுவதால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சாலை வழியாக பயணிப்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பனிப்பொழிவால் உறைபனி உருவாகியுள்ளதாகவும் அதன் கனத்தால் மரங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் சேதமடைந்து விழுவதற்கான அபாயம் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை, விளையாட்டுப் போட்டிகள், ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரை அனைத்தும் குளிரால் பாதிப்படைந்துள்ளது.

சிகாகோ, போர்ட்லாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்று(16) விடுமுறை விடப்பட்டுள்ளது.

தனியார் அமைப்பு 2,900க்கும் அதிகமான விமான பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம்(15) தெரிவித்துள்ளது.

இந்த வாரத்தின் மத்தியில் வெப்பநிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய குளிர் அலை ஒன்று வடக்கு மற்றும் மத்தியமேற்கு பகுதி வழியாக வாரக் கடைசியில் தெற்கு நோக்கி செல்லும் எனக் கணிக்கப்படுகிறது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...