Newsகூகுளில் தொடரும் பணிநீக்க நடவடிக்கை

கூகுளில் தொடரும் பணிநீக்க நடவடிக்கை

-

உலகின் முன்னணி பன்னாட்டு இணையதள மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2023 ஜனவரி மாதம், சர்வதேச அளவில் தனது ஊழியர்களில் 12,000 (6 சதவீதம்) பேரை பணிநீக்கம் செய்தது.

“இந்த பணிநீக்க நடவடிக்கை மிகப்பெரியதாயினும் நிறுவன வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது” என கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அப்போது தெரிவித்திருந்தார்.

2024 ஜனவரி மாதம், மீண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கூகுள் பணிநீக்கம் செய்தது.

சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆண்டிற்கான திட்டங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

”கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நமது இலட்சியங்கள் மிக பெரியவை. நமது முன்னுரிமைகளும் அதிகம். இத்தகைய ஒரு இலக்கு உள்ள போது நாம் பெரிய கடினமான முக்கிய முடிவுகளை எடுத்தாக வேண்டும்.

அவசியமில்லாத சில பணிகள் நீக்கப்படும். ஆனால், அதன் எண்ணிக்கை கடந்த வருடம் போல் அதிகம் இருக்காது.

இந்நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு துறைகளில் நிலவும் அடுக்குகளை(layers) நீக்குவதற்காக எடுக்கப்படுகிறது. சில ஊழியர்களுக்கு இவை முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளன.

சில பணிக்குழுக்களில் ஆண்டு முழுவதும் பணிகளின் அவசியம் குறித்து ஆராயப்பட்டு வரும். அவ்வப்போது சில பணிகள் தேவையற்று போகலாம்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியா வரும் ஆசிய சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. பல...

பிளாஸ்டிக் பொருட்களில் 4,200 ரசாயனங்களை தடை செய்ய கோரிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...

HIV நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் – ட்ரம்ப்பே காரணம்

உலகளாவிய HIV தடுப்பு நடவடிக்கைக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியதால், 2029 ஆம் ஆண்டுக்குள் HIV தொடர்பான இறப்புகள் மில்லியன் கணக்கில் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள்...

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...