Newsஇலங்கையில் அமைச்சர் ஜீவன் தலைமையில் தேசிய பொங்கல் விழா

இலங்கையில் அமைச்சர் ஜீவன் தலைமையில் தேசிய பொங்கல் விழா

-

இலங்கையில் மலையக வரலாற்றில் முதன்முறையாக, தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் நேற்று (21) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலை, கலாசார நிகழ்வுகள், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், போட்டிகள் என பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படு, தேசிய தைப்பொங்கல் விழா வெற்றிகரமாக நடைபெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழா தேசிய ரீதியில் மட்டுமல்ல உலக வாழ் தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிகழ்வுக்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சும் ஒத்துழைப்பு வழங்கி இருந்தது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இ.தொ.காவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அமைச்சுகளின் செயலாளர்கள், நுவரெலியா மாவட்ட அரச அதிபர், அரசாங்க அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன், தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், சம்யுக்தா, மீனாக்சி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கும் பங்கேற்று மக்களை மகிழ்வித்தனர்.

1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, கோலப்போட்டி, சிலம்பாட்டம், தப்பாட்டம் என பல கலை, கலாசார அம்சங்களுடன் விழா நடைபெற்றது.

மலையக வரலாற்றில் இம்முறையே 1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு, மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய பொங்கல் விழா நடத்தப்பட்டமை இதுவே முதன்முறையாகும்.

மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கவைப்பதற்கான நகர்வுகளில் மற்றுமொரு அங்கமாக தேசிய பொங்கல் விழா பார்க்கப்படுகின்றது.

நன்றி தமிழன்

Latest news

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

இந்தோனேசிய ஜனாதிபதியின் பூனையை கொஞ்சிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபரின் பூனையான 'பாபி'யை செல்லமாக வளர்ப்பது போன்ற காட்சியை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்தோனேசிய அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது...

சிட்னி தெருவில் படகுகளை நிறுத்தியவர்களுக்கு $28,000 அபராதம்

ஆஸ்திரேலியாவின் Randwick நகர சபை, புறநகர் வீதிகளில் படகுகள் மற்றும் டிரெய்லர்களை நிறுத்துபவர்களுக்கு $28,000 அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் புகார்களின் அடிப்படையில் 400 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...

Richmond பள்ளத்தாக்கில் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு NSW அரசாங்கம் ஒப்புதல்

Richmond பள்ளத்தாக்கில் உள்ள Summerville சூரிய மின் உற்பத்தி பண்ணைக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது . இதன் மூலம் 90 மெகாவாட் மின்சாரம்...