Newsகொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய வைரஸ் – எச்சரிக்கும்...

கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய வைரஸ் – எச்சரிக்கும் WHO

-

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரோன் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன. இலங்கை மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, தடுப்பூசியால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், புதிய நோய் தொற்றை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “நாடுகள் மே மாதத்திற்குள் ஒரு புதிய தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அனைத்து நாடுகளில் புதிய தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. டிசீஸ் எக்ஸ் (Disease x) என்று குறிப்பிடும் புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த டிசீஸ் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய நோயாகும். இதனை சமாளிக்க உலக நாடுகள் தயாராக இருங்கள். கொரோனா தொற்றின்போது பல உயிர்கள் இழந்தோம். அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், போதுமான ஒக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் இல்லை. அதேபோல, அனைத்து நாடுகளிலும் சமமான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இது அனைத்து நாடுகளிலும் ஒரு தீவிர பிரச்னையாக உள்ளன” என்றார்.

டிசீஸ் எக்ஸ்:

நமக்கு தெரியாத ஒரு வகையான நுண்ணுயிர் பாதிப்பால் ஏற்படும் தொற்றை தான் டிசீஸ் எக்ஸ் என்று சொல்லப்படுகிறது. கொரோனா போலவே விலங்குகளிடையே பல நூறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. அவை மனிதர்களுக்கு பரவினால் கொரோனாவை போல் பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த பாதிப்பு இணையாக இந்த புதிய தொற்று ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸை போலவே இந்த புதிய வைரஸும் தன்னுடைய வெவ்வேறு திர்ப்புகளை இயற்கையாகவே மாறுபாடு அடைந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

Google அறிமுகப்படுத்திய சமீபத்திய சாதனம்

Google Translate-இற்கு Google ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது எந்த Headphone மூலமாகவும் real-time, one-way translation device-ஆக செயல்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப்...

விக்டோரியாவில் நடந்த கார் விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலி

விக்டோரியாவின் பிராந்தியப் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த மினிவேன் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மெல்பேர்ணுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள முக்காத்தாவில் உள்ள...

தேசிய நாயகனாகப் போற்றப்படும் Bondi நாயகன்

NSW லிபரல் தலைவர் கெல்லி ஸ்லோன், Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் போது காட்டப்பட்ட அசாதாரண துணிச்சல் மற்றும் மனிதாபிமானம் குறித்து Sunrise-இல்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...

Bondi தாக்குதலுக்குப் பிறகு Ashes டெஸ்டுக்கு சிறப்பு பாதுகாப்பு

Bondi கடற்கரையில் நடந்த பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அடுத்த புதன்கிழமை தொடங்கும் மூன்றாவது ஆஷஸ் டெஸ்டுக்கு அடிலெய்டு ஓவலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலிய...

Bondi தாக்குதலில் உயிர் இழந்த Matilda

Bondi கடற்கரையில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில், 10 வயது மாடில்டா குறிப்பிட்ட விவாதத்திற்குரிய பொருளாக இருந்துள்ளார். இந்த ஹனுக்கா கொண்டாட்டத்தில் தனது தங்கையுடன் கலந்து கொண்ட...