Newsகொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய வைரஸ் – எச்சரிக்கும்...

கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய வைரஸ் – எச்சரிக்கும் WHO

-

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டளவில் பரவத் தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை என பரவிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மேலும், அவ்வப்போது குரங்கு அம்மை, ஒமிக்ரோன் போன்ற உருமாறிய கொரோனா வகைகளும் அச்சுறுத்தி வந்தன. இலங்கை மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, தடுப்பூசியால் தான் சீக்சிரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், புதிய நோய் தொற்றை சமாளிக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பேசிய டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “நாடுகள் மே மாதத்திற்குள் ஒரு புதிய தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அனைத்து நாடுகளில் புதிய தொற்று நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. டிசீஸ் எக்ஸ் (Disease x) என்று குறிப்பிடும் புதிய நோய் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த டிசீஸ் எக்ஸ் நோய் கொரோனாவை விட 20 மடங்கு ஆபத்தான கொடிய நோயாகும். இதனை சமாளிக்க உலக நாடுகள் தயாராக இருங்கள். கொரோனா தொற்றின்போது பல உயிர்கள் இழந்தோம். அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். ஆனால், போதுமான ஒக்ஸிஜன் இருப்பு, படுக்கைகள் இல்லை. அதேபோல, அனைத்து நாடுகளிலும் சமமான அளவில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. இது அனைத்து நாடுகளிலும் ஒரு தீவிர பிரச்னையாக உள்ளன” என்றார்.

டிசீஸ் எக்ஸ்:

நமக்கு தெரியாத ஒரு வகையான நுண்ணுயிர் பாதிப்பால் ஏற்படும் தொற்றை தான் டிசீஸ் எக்ஸ் என்று சொல்லப்படுகிறது. கொரோனா போலவே விலங்குகளிடையே பல நூறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. அவை மனிதர்களுக்கு பரவினால் கொரோனாவை போல் பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த பாதிப்பு இணையாக இந்த புதிய தொற்று ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸை போலவே இந்த புதிய வைரஸும் தன்னுடைய வெவ்வேறு திர்ப்புகளை இயற்கையாகவே மாறுபாடு அடைந்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...