Cinemaபண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல்

பண்ணைபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரிணியின் உடல்

-

பாடகி பவதாரிணியின் இறுதிக் கிரியைகள் இன்று 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானாா்.

நமக்கு மிகவும் பிடித்த பல பாடல்களைப் பாடிய அந்தக் குரல் நேற்று ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், பவதாரணி குரலில் பதிவு செய்யப்பட்டு, இதுவரை வெளிவராத பாடல் ஒன்றை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன் என்று பாடலையும் இணைத்துள்ளார்.

முன்னதாக, மறைவு செய்தி கேட்டதும், கனிமொழி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், இசைக் கலைஞர் பவதாரணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்.

புற்றுநோய் பாதித்து இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று காலமானார். அவரது உடல் வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரணி உடல் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்கு பிறகு பவதாரணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவரது உடல் அங்கிருந்து இன்று மாலை சென்னை கொண்டு செல்லப்பட்டது.

இதன்படி பவதாரிணியின் இறுதிக் கிரியைகள் இன்று 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு 10 மணியளவில் அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு திரையுலகத்தினரின் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக தி. நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பவதாரிணியின் உடல் வைக்கப்பட்டுருந்தது.

அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு மாலை இறுதிக் கிரியைகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...