Cinemaசர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் 'எமர்ஜென்சி' திரைப்படம்

சர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ திரைப்படம்

-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியுமுள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, நவ. 24ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். சில காரணங்களால் படத்தின் வெளியிட்டுத்திகதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த படம் வருகிற ஜூன் 14ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த படம் குறித்து கங்கனா ரணாவத் பேசுகையில், ‘சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை எடுத்து இருக்கிறேன். எமர்ஜென்சி இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம். அதனை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். ஒரு வரலாற்று நிகழ்வை படமாக்கியது மகிழ்ச்சி’ என்றார்.

இந்நிலையில் இந்த படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். படம் ரிலீசாகும்போது எதிர்ப்பை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Neo-Nazi போராட்டங்களுக்கு கடுமையான சட்டங்கள் தேவை

நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தின் முன் ஒரு Neo-Nazi குழு ஏன் சட்டப்பூர்வமாக போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்...

Desi Freeman-ஐ தேடும் பணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்

விக்டோரியா காவல்துறை கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சந்தேக நபர் தப்பி ஓடிய பிறகு கேட்ட துப்பாக்கிச் சத்தங்களைக் கண்டறிய,...

ஆஸ்திரேலிய வானொலி வரலாற்றின் மன்னர் ஜான் லாஸ் காலமானார்

ஆஸ்திரேலிய வானொலி வரலாற்றில் "The Broadcaster of the Century" என்று அழைக்கப்படும் ஜான் லாஸ் காலமானார். இறக்கும்போது அவருக்கு 90 வயது ஆகும். ஜான் லாஸ் 70...

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டம்

Western Institute of Health Services, செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் விக்டோரியா, டீக்கின் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப்...

39 கிலோ போதைப் பொருளுடன் சிட்னி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பெண்

சிட்னி விமான நிலையத்தில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் தனது சூட்கேஸ்களை விரிவாக சோதனை செய்ததில் மிளகாய்த் துண்டுகளில் 39 கிலோ மெத் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை...

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டம்

Western Institute of Health Services, செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் விக்டோரியா, டீக்கின் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப்...