Cinemaசர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் 'எமர்ஜென்சி' திரைப்படம்

சர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ திரைப்படம்

-

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியுமுள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, நவ. 24ஆம் திகதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். சில காரணங்களால் படத்தின் வெளியிட்டுத்திகதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த படம் வருகிற ஜூன் 14ஆம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த படம் குறித்து கங்கனா ரணாவத் பேசுகையில், ‘சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை எடுத்து இருக்கிறேன். எமர்ஜென்சி இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம். அதனை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். ஒரு வரலாற்று நிகழ்வை படமாக்கியது மகிழ்ச்சி’ என்றார்.

இந்நிலையில் இந்த படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். படம் ரிலீசாகும்போது எதிர்ப்பை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...