Newsஅயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

அயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

-

ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற பிரதிஷ்டை நிகழ்வில் 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா். பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, தரிசனத்துக்காக கடந்த 23ஆம் திகதிமுதல் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வார இறுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 இலட்சத்துக்கும் மேல் பக்தா்கள் அயோத்திக்கு வந்து ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களிலும், ராமா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகியுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக உத்தர பிரதேச மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் அனில் ராஜ்பா் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையை மையப்படுத்தி அயோத்தியில் குறைந்தது 5 இலட்சம் நேரடி அல்லது மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, அயோத்தி இளைஞா்கள் பலா் தொழில்முனைவோராக மாற வாய்ப்புள்ளது. தேவை பெருகுவதால் சிறு வணிகா்களின் வா்த்தகம் விரிவடையும். வேலைவாய்ப்பில் உள்ளூா் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி, அடுத்த 2 ஆண்டுகளில் அயோத்தியில் செயல்பாட்டைத் தொடங்கவிருக்கும் 10க்கும் மேற்பட்ட சா்வதேச நட்சத்திர விடுதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை எளிதாக்க, அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து எங்கள் துறை பணியாற்றி வருகிறது’ என்றாா்.

நன்றி தமிழன்

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...