Newsஅயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

அயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

-

ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற பிரதிஷ்டை நிகழ்வில் 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா். பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, தரிசனத்துக்காக கடந்த 23ஆம் திகதிமுதல் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வார இறுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 இலட்சத்துக்கும் மேல் பக்தா்கள் அயோத்திக்கு வந்து ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களிலும், ராமா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகியுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக உத்தர பிரதேச மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் அனில் ராஜ்பா் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையை மையப்படுத்தி அயோத்தியில் குறைந்தது 5 இலட்சம் நேரடி அல்லது மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, அயோத்தி இளைஞா்கள் பலா் தொழில்முனைவோராக மாற வாய்ப்புள்ளது. தேவை பெருகுவதால் சிறு வணிகா்களின் வா்த்தகம் விரிவடையும். வேலைவாய்ப்பில் உள்ளூா் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி, அடுத்த 2 ஆண்டுகளில் அயோத்தியில் செயல்பாட்டைத் தொடங்கவிருக்கும் 10க்கும் மேற்பட்ட சா்வதேச நட்சத்திர விடுதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை எளிதாக்க, அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து எங்கள் துறை பணியாற்றி வருகிறது’ என்றாா்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...