Newsஅயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

அயோத்தியில் அதிகரிக்கும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

-

ராமா் கோயில் பிரதிஷ்டையைத் தொடா்ந்து, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கருவறையில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை கடந்த 22ஆம் திகதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெற்ற பிரதிஷ்டை நிகழ்வில் 8,000க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்றனா். பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, தரிசனத்துக்காக கடந்த 23ஆம் திகதிமுதல் பக்தா்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வார இறுதியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 இலட்சத்துக்கும் மேல் பக்தா்கள் அயோத்திக்கு வந்து ராமா் கோயிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களிலும், ராமா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, அயோத்தியில் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பன்மடங்கு பெருகியுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என உள்ளூா் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

இது தொடா்பாக உத்தர பிரதேச மாநில தொழிலாளா் நலத்துறை அமைச்சா் அனில் ராஜ்பா் கூறுகையில், ‘அடுத்த 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறையை மையப்படுத்தி அயோத்தியில் குறைந்தது 5 இலட்சம் நேரடி அல்லது மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, அயோத்தி இளைஞா்கள் பலா் தொழில்முனைவோராக மாற வாய்ப்புள்ளது. தேவை பெருகுவதால் சிறு வணிகா்களின் வா்த்தகம் விரிவடையும். வேலைவாய்ப்பில் உள்ளூா் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி, அடுத்த 2 ஆண்டுகளில் அயோத்தியில் செயல்பாட்டைத் தொடங்கவிருக்கும் 10க்கும் மேற்பட்ட சா்வதேச நட்சத்திர விடுதிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை எளிதாக்க, அயோத்தி மாநகராட்சியுடன் இணைந்து எங்கள் துறை பணியாற்றி வருகிறது’ என்றாா்.

நன்றி தமிழன்

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...