Sportsடென்னிஸ் தொடரின் சம்பியனானார் ஷின்னர் - அவுஸ்திரேலிய ஒபன்

டென்னிஸ் தொடரின் சம்பியனானார் ஷின்னர் – அவுஸ்திரேலிய ஒபன்

-

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த இளம் வீரர் ஜன்னிக் ஷின்னர். ரஷ்யாவின் மெத்வதேவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சம்பியனானார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14‍ம் திக‌தி தொடங்கியது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் ஷின்னர் மெத்வதேவாகியோர் மோதினர். நேற்று முந்தினம் (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் ஷின்னர் வெற்றி பெற்றார்.

ஷின்னர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது இத்தாலி நாட்டு வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பட்டம் வென்ற இள வயது வீரருக்கான பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...