Newsவேலை நாட்களை குறைக்கும் திட்டத்தில் ஜெர்மனி

வேலை நாட்களை குறைக்கும் திட்டத்தில் ஜெர்மனி

-

உலகில் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்கின்றன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த வேலை நேரங்கள் பரவலாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது.

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீழ புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வரும் பெப்ரவரி 1 முதல், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறையும், நான்கு நாட்களுக்கு வேலையும் செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது.

பல தொழிலாளர் சங்கங்கள் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என வாதித்து வந்த நிலையில் அமுலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நடைமுறை, நற்பிரதிபலன்களை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தித் திறனை அதிகரிப்பதன்மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்னையும் தீர்வுக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...