Breaking Newsமருத்துவமனைக்குள் புகுந்த இரகசிய இஸ்ரேலிய SF - பரபரப்பு சம்பவம்

மருத்துவமனைக்குள் புகுந்த இரகசிய இஸ்ரேலிய SF – பரபரப்பு சம்பவம்

-

பாலஸ்தீன மக்களின் உயிரிழப்புகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், காஸா பகுதியில் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 26,637 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 65,387 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இஸ்ரேலியப் படைகள் மூன்று பக்கங்களிலிருந்தும் “காசா நகர” பகுதிக்குள் நுழைந்து பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 1 முதல், 1.38 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 700,000 பேர் 161 தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என மாறுவேடமிட்டு இஸ்ரேலிய சிறப்புப் படை வீரர்கள் நுழைந்து அங்கிருந்த மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு தயாராக இருந்த மூன்று ஹமாஸ் போராளிகளை தங்கள் கமாண்டோக்கள் கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

Latest news

60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு “இரவு ஊரடங்கு உத்தரவு” என்ற செய்தி தவறானது!

60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வரும் வதந்தி தவறானது என்று தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய...

டிரம்பின் புதிய உத்தரவால் சிக்கலில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் வேலை விசாக்களில் உள்ள...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின் சாதன நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கில் அபராதம்

ஆஸ்திரேலியாவில் பெரிய அளவிலான மின் சாதனம் மற்றும் வீட்டு உபகரண பிராண்டான The Good Guys நிறுவனத்திற்கு பெடரல் நீதிமன்றம் 13.5 மில்லியன் டாலர் அபராதம்...

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சிட்னி விமான நிலையத்தில் 20 கிலோ கோகோயினுடன் பிடிபட்ட அமெரிக்கர்

நேற்று சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கிய 31 வயது அமெரிக்கப் பெண் ஒருவர் தனது சூட்கேஸில் 6.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. LA-விலிருந்து...