Breaking Newsமருத்துவமனைக்குள் புகுந்த இரகசிய இஸ்ரேலிய SF - பரபரப்பு சம்பவம்

மருத்துவமனைக்குள் புகுந்த இரகசிய இஸ்ரேலிய SF – பரபரப்பு சம்பவம்

-

பாலஸ்தீன மக்களின் உயிரிழப்புகள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், காஸா பகுதியில் நடவடிக்கைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 26,637 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 65,387 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இஸ்ரேலியப் படைகள் மூன்று பக்கங்களிலிருந்தும் “காசா நகர” பகுதிக்குள் நுழைந்து பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு அறிவித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் 1 முதல், 1.38 மில்லியன் பாலஸ்தீனியர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் 700,000 பேர் 161 தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனைக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என மாறுவேடமிட்டு இஸ்ரேலிய சிறப்புப் படை வீரர்கள் நுழைந்து அங்கிருந்த மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு தயாராக இருந்த மூன்று ஹமாஸ் போராளிகளை தங்கள் கமாண்டோக்கள் கொன்றதாக இஸ்ரேல் கூறுகிறது.

Latest news

ஒரு வருடத்தில் பிரித்தானிய நாட்டிற்குள் பிரவேசித்த 43000 அகதிகள்

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு (2025) ஒக்டோபர் 31 ஆம் திகதிவரையான காலத்தில் சுமார் 43...

குழந்தைப் பருவப் புற்றுநோய்க்கு விக்டோரியா அரசு பாரிய ஆதரவு

குழந்தைப் பருவப் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புதிய சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்க விக்டோரியன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குழந்தை புற்றுநோய் சிகிச்சைத் துறையில் புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பணவீக்கம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அதிகப்படியான செலவு பணவீக்கத்திற்கு பங்களித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதியமைச்சர் Jim Chalmers மீது இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அரசாங்கத்தின் அதிகப்படியான...

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் திருடப்படும் ஒரு துப்பாக்கி

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு துப்பாக்கி திருடப்படுவதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. இது குற்றவாளிகள் துப்பாக்கிகளைப் பெறுவதற்கான எளிமையை அதிகரிக்கும் என்று நிபுணர்கள்...

பெர்த்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய செல்லப்பிராணி சட்டம் – மீறினால் $300 அபராதம்

பெர்த்தில் உள்ள Melville நகர சபை வீட்டுப் பூனைகள் குறித்து சர்ச்சைக்குரிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு வீட்டில் இரண்டு பூனைகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும்...

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் தொடங்கும் Bulk-Billing ஏற்பாடு

ஆஸ்திரேலியாவின் புதிய Bulk-Billing (முழு அரசாங்க நிதியுதவி சிகிச்சை) திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ ஒரு மருத்துவரைப்...