Newsகுறுஞ்செய்திகளை நோட்டம் விடும் கூகுள்

குறுஞ்செய்திகளை நோட்டம் விடும் கூகுள்

-

கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான ‘கூகுள் மெசேஜஸ்’ (Google Messages)-ல் தற்போது தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது. அதன் பீட்டா (Beta) வடிவங்களை குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அனுமதித்து சோதனையும் செய்துவருகிறது.

இந்நிலையில், அப்புதிய செய்யறிவு அம்சம் கொண்ட குறுஞ்செய்தி செயலி பயனர்களின் உரையாடல்களை கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் யாருடன் என்ன பேசுகிறார்கள்? எப்படி பேசுகிறார்கள்? பயனர்கள் பேசுபவருடனான உறவு என்ன? பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னென்ன? எங்கு எப்படி பேசுவார்கள்? அதாவது அலுவலகத்தில் இருந்தால் எப்படி பேசுகிறார்கள், வீட்டிலிருந்தால் எப்படி பேசுகிறார்கள் என்பதையும் கண்காணிக்கும் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமன்றி கண்காணிக்கப்படும் எழுத்து வடிவிலான உரையாடல் விவரங்கள் மற்ற சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ள செய்யறிவு, இந்த விவரங்களைக் கண்காணித்து, வரும் குறுஞ்செய்திகளுக்கு என்ன பதிலளிக்கலாம் எனப் பரிசீலிக்கும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் கூகுளின் இன்காங்கனீட்டோ (incognito mode) பக்கத்திலும், பயனாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்ததற்காக, கூகுளுக்கு 5 பில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இன்காங்கனிட்டோ பக்கத்தில் கண்காணிக்கப்படமாட்டோம் எனத் தவறான பிம்பத்தை மக்களிடையே உருவாக்கி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்க ரகசிய சேவையில் சேர்ந்த 13 வயது சிறுவன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 13 வயது சிறுவனை அமெரிக்க ரகசிய சேவையின் முகவராக நியமித்துள்ளார். டிஜே என்ற மைனர் ஒருவர் ரகசிய புலனாய்வு சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக...

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கானிலிருந்து ஒரு நல்ல செய்தி

இரண்டு முறை சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலை சீராகி வருவதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 88 வயதான போப், பிப்ரவரி நடுப்பகுதியில் இருந்து நிமோனியாவுக்கு சிகிச்சை...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...

நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

வடக்கு விக்டோரியாவில் மேலும் ஒரு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால் நுளம்புக்கடியில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதல் வழக்கு நியூ சவுத்...

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளில் மாற்றம்

விக்டோரியன் சாலைகளில் வேக வரம்புகளை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, விக்டோரியாவில் சில சாலைகளில் வேக வரம்பு 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் 30 ஆண்டு...