NoticesTamil Community Eventsதமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024

-

தமிழர் திருநாள் ஆஸ்திரேலியா 2024 இம்முறை வெகுசிறப்பாக Nunawarding Community Hub & Tunstall Park இல் சுமார் 5000இற்கும் மேலான தமிழ் மற்றும் பல்லின கலாசார மக்களின் பங்குபற்றலுடன், இருபது(20) அமைப்புகளின் பங்களிப்பில் பிரம்மாண்டமாக நடந்தேறியது.

2011ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொங்கல் நிகழ்வு பல பரிமாண வளர்ச்சிபெற்று, பின்னர் எல்லா அமைப்பினரும் பங்குபற்றும் ஒரு பெரும் பொங்கல் நிகழ்வாக மாற்றவேண்டும் என்ற கேசி தமிழ் மன்றத்தின் பெரும் எண்ணத்தின்பால் 2019ம் ஆண்டில் கேசி தமிழ் மன்றத்தின் பொங்கல் விழா, ”தமிழர் திருநாள் அவுஸ்திரேலியா” எனப் பெயர்மாற்றம் பெற்று கேசி தமிழ் மன்றம் பல சமுக அமைப்புக்களின் பங்களிபில் இன்று மிகப்பெரிய தமிழர் அடையாள நிகழ்வாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காலை 9:30 மணிக்கு மெல்போனின் எல்லாப் பக்கங்களிலும் இருந்து காலைவேளையில் வந்த சுமார் 30இற்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளுடன் ஊரெல்லாம் கூடி ஆரம்பமாகிய பொங்கல், கும்மியாட்டம் மற்றும் பறை இசையுடன் களைகட்டி பார்வையாளர்களுக்கு தமிழ் உணர்வைத் தட்டிஎழுப்பியது.

பின்னர் உள்ளரங்க, வெளியரங்க நிகழ்வுகள் மற்றும் தமிழர் விளையாட்டான சடுகுடு , கிளித்தட்டு , அங்காடிகள், சிறுவர் விளையாட்டு ( Kids Rides) , மிருக பண்ணை என பார்க்கும் இடம் எல்லாம் விழக்கோலம்பூண்டிருந்தது. இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என எல்லோரும் மிக ஈடுபாட்டுடன் தமிழர் விளையாட்டில் ஆர்வமாக பங்குபற்றி விளையாட்டுத்திடலைச் சூழ்ந்திருந்த மக்களை மகிழ்வித்து ஆரவரத்துடன் கொண்டாடினார்கள். தமிழர் பாரம்பரியம் வருகின்ற தலைமுறைக்கும் கடத்தப்படுகிறது என்ற மன நிறைவு தோன்றியுள்ளது.

உள்ளரங்கில் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட புகைப்பட , ஓவிய , புத்தக கண்காட்சியும்,குழந்தைகளுக்கான முகப் பூச்சு , மண்பானை செய்தல், பாணக்கு வர்னம் தீட்டுதல், கீழடி கண்காட்சி, தேனீர்க்கடை, மற்றும் பல நிகழ்வுகளும் சிறுவர்கள் பெரியவர்கள் என எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது

இதுமட்டுமல்லாது கேசி தமிழ் மன்றத்தின் அரையாண்டு மலர் இளவேனிலின் 25ஆவது இதழ் வெளியிடப்பட்டது. கடந்த 3 இதழ்கள் அவுஸ்திரேலிய தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த, நாம் கேட்கத் தவறிய, அல்லது கேட்க விரும்பாத குரல்களைக் கொண்ட இதழ்.

வெளியரங்க மேடையில் தமிழ், Bulgarian, கிழைத்தேய மேலைத்தேய இசை நிகழ்வு, தமிழர் பாரம்பரிய கிராமிய நடனம், பரத நாட்டியம், வீணை , தமிழர் இசை என சுமார் 5 மணி நேரம் இடைவிடாத நிகழ்வுகள் மக்கள் வெள்ளத்தில் இடம்பெற்றது. இப்பகுதி நாம் இதுவரை கானாத , சந்திக்காத ஒரு பிரம்மாண்ட தோற்றத்தை எற்படுத்தியது, பார்க்கும் இடம் எல்லாம் கலாசர உடையில் இளைஞர்கள் , யுவதிகள், சிறுவர்கள், முதியவர்கள் என கூட்டம் களைகட்டி கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

Latest news

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

பாலிக்கு போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சுற்றுலாத் தீவான பாலிக்கு கோகைன் கடத்தியதாக ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள Cairns-ஐ சேர்ந்த 43...

ANU மனநல மருத்துவமனையில் கத்தியால் குத்திய சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் (ANU) இரண்டு மாணவர்களை கத்தியால் கடுமையாக காயப்படுத்திய 26 வயதான Alex Ophel-ஐ, வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பான மனநல மருத்துவமனையில் அடைக்க...