Newsஅழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

அழகுசாதனப்பொருட்களால் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ள மனைவி!

-

இந்தியாவின் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என கோரியுள்ளதுடன் அதற்காக அவர் கூறியுள்ள காரணம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தான் பயன்படுத்துவதற்காக வாங்கி வைத்திருந்த அழகுசாதனப்பொருட்களை தனது மாமியார் எடுத்து பயன்படுத்துவதாகவும் இதன் காரணமாகவே தான் விவாகரத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வீட்டில் அடிக்கடி மாமியாருக்கும், மருமகளுக்கும் சண்டை நடந்துள்ளதுடன் சில மாதங்களுக்குப் பின்னர் இது தற்போது விவாகரத்திற்கு வந்துள்ளது.

அடிக்கடி தனது அழகுசாதனப்பொருட்களை பயன்படுத்துவதால் அவை சில நாட்களுக்குள் தீர்ந்து போவதாகவும், இதன் காரணமாக தன்னால் வெளியே செல்லும் போது அவற்றை பயன்படுத்த முடியாது போவதாகவும் அந்த பெண் தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த குறித்த பெண்ணின் கணவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் பலரும் இதனை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...