News58 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டம்

58 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவருக்கு கிராண்ட்மாஸ்டர் பட்டம்

-

மறைந்த செஸ் வீரர் மிர் சுல்தான் கான் பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

அவர் இறந்து 58 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு இந்த பட்டத்தை உலக செஸ் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

மிர் சுல்தான் 1929, 1931 ,1931ம் ஆண்டுகளில் பிரிட்டிஸ் செஸ் சம்பியன்ஷிப்பை வென்றிருந்தார். அதேபோல், ஃபிராங்க் மார்ஷல் ,சவில் டார்டகோவர் ,முன்னாள் உலக சம்பியனான ஜோஸ் ரவுல் கபாப்லாங்கா போன்ற ஜாம்பவான்களை வென்றுள்ளார்.

மிர் சுல்தான் கான் அப்போது பிரிக்கப்படாத இந்தியா – பாகிஸ்தானில் ஆசியாவின் தலைசிறந்த செஸ் வீரராக திகழ்ந்தார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் இந்தியாவுக்கு விளையாடிருந்தாலும், இப்போது 2024ல் அவருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...