Newsதாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி - சாரதி கைது

தாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி – சாரதி கைது

-

தாய்லாந்தின் பட்டாயாவில் செல்லமாக வளர்த்த சிங்கக் குட்டியை காரில் ஏற்றிக்கொண்டு வீதி உலா சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவானது, வெள்ளை நிற பென்ட்லி காரின் பின் இருக்கையில் சங்கிலியால் கட்டப்பட்ட சிங்கக் குட்டி ஒன்று அமர்ந்து பெண் மற்றும் ஆணுடன் காரின் முன் இருக்கைகளில் அமர்ந்து செல்வதைக் காட்டுகிறது.

சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் சிங்கத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அதிகாரப்பூர்வ பதிவு தேவை.

குறித்த பெண் தாய்லாந்து நபரிடம் இருந்து இந்த சிங்கக்குட்டியை வாங்கியதாகவும், எனவே அவர் சிங்கக்குட்டியை பட்டாயாவிற்கு கொண்டு வந்ததாகவும், ஆனால் அதற்கு முன் சட்டப்பூர்வ அனுமதியை பெற தவறியதாகவும், எனவே இந்த விலங்கின் போக்குவரத்து மற்றும் உரிமை சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி, அனுமதியின்றி காட்டு விலங்கை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 100,000 பாட் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கக்குட்டியை வாடகை விடுதியில் தங்கவைத்ததாக கூறப்படும் இலங்கையரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...

பொய் சொல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வேலை விண்ணப்பதாரர்களில் 33 சதவீதம் பேர் தங்கள் விண்ணப்பப் படிவங்களில் தவறான தகவல்களைச் சேர்த்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி வழக்கறிஞர் ஒருவர் ஊடகங்களுக்குத்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...

ஆஸ்திரேலிய நடிகைக்கு பிறந்த ஏழாவது குழந்தை

ஆஸ்திரேலிய நடிகை மேடலின் வெஸ்ட் தனது ஏழாவது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 47 வயதான அவர் கடந்த சனிக்கிழமை தனது பிறந்த குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன்...

2 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த பெற்றோர்கள்

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இருந்து தங்கள் குழந்தையை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேடிசன் பெருநகரப் பகுதியில் வசிக்கும் இவர்கள், தங்கள்...