Newsதாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி - சாரதி கைது

தாய்லாந்து வீதிகளில் சுற்றித்திரிந்த சிங்கக்குட்டி – சாரதி கைது

-

தாய்லாந்தின் பட்டாயாவில் செல்லமாக வளர்த்த சிங்கக் குட்டியை காரில் ஏற்றிக்கொண்டு வீதி உலா சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவானது, வெள்ளை நிற பென்ட்லி காரின் பின் இருக்கையில் சங்கிலியால் கட்டப்பட்ட சிங்கக் குட்டி ஒன்று அமர்ந்து பெண் மற்றும் ஆணுடன் காரின் முன் இருக்கைகளில் அமர்ந்து செல்வதைக் காட்டுகிறது.

சம்பவத்தின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றதாக பிபிசி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் சிங்கத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் அதிகாரப்பூர்வ பதிவு தேவை.

குறித்த பெண் தாய்லாந்து நபரிடம் இருந்து இந்த சிங்கக்குட்டியை வாங்கியதாகவும், எனவே அவர் சிங்கக்குட்டியை பட்டாயாவிற்கு கொண்டு வந்ததாகவும், ஆனால் அதற்கு முன் சட்டப்பூர்வ அனுமதியை பெற தவறியதாகவும், எனவே இந்த விலங்கின் போக்குவரத்து மற்றும் உரிமை சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி, அனுமதியின்றி காட்டு விலங்கை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 100,000 பாட் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கக்குட்டியை வாடகை விடுதியில் தங்கவைத்ததாக கூறப்படும் இலங்கையரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...

விக்டோரியா அரசாங்கத்தின் புதிய வரி எங்களுக்கு ஒரு சுமை!

விக்டோரியன் கவுன்சில்கள் விக்டோரியன் அரசாங்கத்தின் புதிய அவசர சேவை வரியை சவால் செய்கின்றன. அந்த நோக்கத்திற்காக மேயர்கள் நேற்று மெல்பேர்ணில் கூடினர். பல பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தை எச்சரிக்கும் Google

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையில் YouTube-ஐயும் சேர்த்தால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடரப்போவதாக கூகிள் அச்சுறுத்தியுள்ளது. Daily Telegraph செய்தியின்படி, Google தகவல்...