Sports4வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது அவுஸ்திரேலியா!

4வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது அவுஸ்திரேலியா!

-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி U19 உலகக்கோப்பையை வென்றது.

Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. கேப்டன் ஹூக் வெய்ப்கென் 48 ஓட்டங்களும், தொடக்க வீரர் ஹாரி டிக்ஷன் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 64 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஒலிவர் பெக்கே ஆட்டமிழக்காமல் 46 (43) ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலிய அணி 253 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்திய அணியின் தரப்பில் ராஜ் லிம்பனி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அர்ஷின் குல்கர்னி 3 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து முஷீர் கான் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பியர்டுமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆதர்ஷ் சிங் 47 (77) ஓட்டங்களில் வெளியேறினார். 122 ஓட்டங்களை எடுத்திருந்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது முருகன் அபிஷேக் அணியை மீட்க போராடினார். அவர் 46 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் பியர்டுமேன் மற்றும் ராப் மெக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், கலம் விட்லெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய அவுஸ்திரேலியா, நான்காவது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...