Newsஇனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

இனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

-

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகஸ்கர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.

10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது இரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும். 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.

ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மடகஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கவுள்ள பல சிறப்பு நன்மைகள்

நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த, எதிர்காலத்தில் மருத்துவக் காப்பீட்டு நிதியில் பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த ஆளும் தொழிலாளர் கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2030 ஆம் ஆண்டுக்குள் இலவச...

மிகப்பெரிய நிதி நெருக்கடியில் உள்ள விக்டோரியா

விக்டோரியன் மாநில அரசாங்கத்திற்குள் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. மாநிலம் தற்போது கடுமையான கடன் நெருக்கடியை எதிர்கொள்வதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வரவிருக்கும் வேலை வெட்டுக்கள் குறித்த விவரங்களை மாநில...

பணியிட அழுத்தத்தைக் குறைக்க தயாராகும் விக்டோரியா

வேலையில் மன அழுத்தத்தைத் தடுக்க விக்டோரியன் அரசு பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. பணி அழுத்தத்தை நிர்வகிப்பது தொடர்பாக இந்தப் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இது...

புலம்பெயர்ந்தோரும் விண்ணப்பிக்கக்கூடிய பல புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட நிதிக்கு கூடுதலாக $500 மில்லியன் நிதியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் துறையில் புதிய...

25 ஆண்டுகளில் மெல்பேர்ண் வீட்டு விலைகளில் ஏற்பட்டிள்ள மாற்றம்

மெல்பேர்ணின் சராசரி வீட்டுச் சந்தையில் விலைகள் எவ்வாறு மாறிவிட்டன என்பது குறித்து ஒரு புதிய வெளிப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. இது PropTrack இன் தரவை அடிப்படையாகக் கொண்டது என்று...

ஆஸ்திரேலியாவில் Qantas-ஐ வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்த Virgin

ஜனவரி மாதத்தில் தாமதமின்றி விமானங்களை இயக்குவதற்கான சிறந்த விமான நிறுவனமாக Virgin Australia தேர்வு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் பொருளாதார பணியகம் வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்...