Newsஇனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

இனி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தண்டனையாக ஆண்மை நீக்கம்

-

கிழக்கு ஆப்பிரிக்காவின் தீவு நாடான மடகஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துவருவதால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு இரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகஸ்கர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.

10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது இரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும். 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.

ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மடகஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் தடை செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், விவசாயிகள் அதிக செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது. ஸ்டிக்கர்களின் விலை உயர்வு சந்தைக்கு பொருட்களை...

AI Botகளைப் பயன்படுத்தி மோசடியைப் பிடிக்க தயாராகும் வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கி, AI பாட்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசி மோசடியால் இழக்கப்படும் மில்லியன் கணக்கான...

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல்...

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் அமுலுக்குவரும் பல சலுகைகள்

செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, ஒரு புதிய நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது, எனவே மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் அரசாங்கத்திடமிருந்து அதிக நிவாரணங்களைப் பெற உள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல்,...

தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

பிரபலமான ஐரோப்பிய சுற்றுலா தலங்களில் Hepatitis A பரவுவதால், ஆஸ்திரேலியர்கள் உடனடியாக தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஜெர்மனி மற்றும் பல...

ஆஸ்திரேலியாவில் வருமானவரி செலுத்தாமல் உள்ள பல மில்லியனர்கள் 

2022-23 நிதியாண்டில் ஆஸ்திரேலியர்கள் கால் டிரில்லியன் டாலர்களுக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளனர். ஆனால் ஒரு பைசா கூட செலுத்தாத டஜன் கணக்கான மில்லியனர்கள் உள்ளனர்...