Newsஇலங்கையில் நடைபெறவுள்ள 2024 சர்வதேச ஸ்ரீமத் பகவத் கீதை மகோற்சவம்

இலங்கையில் நடைபெறவுள்ள 2024 சர்வதேச ஸ்ரீமத் பகவத் கீதை மகோற்சவம்

-

2024 சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்து பக்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத்கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வணக்கத்திற்குரிய மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்பட்டு வருகிறது.

அண்மைய ஆண்டுகளில் குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையின் நிதியனுசரணையுடன் 2024.03.01 தொடக்கம் 2024.03.03 வரை தாமரைத் தடாக வளாகத்தில் நடாத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 11 வெளிநாட்டவர்கள்

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இரண்டு மக்கள் வசிக்காத தீவுகளில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக பதினொரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்குப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள ஆஷ்மோர் தீவில் ஆறு குழு...

ஆஸ்திரேலியாவில் சமீபத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 4 சட்டவிரோத மருந்துகள்

புதிய கழிவு நீர் சோதனைகளின்படி, ஆஸ்திரேலியாவில் நான்கு சட்டவிரோத மருந்துகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையத்தின் (ACIC) சமீபத்திய அறிக்கை, ஆகஸ்ட் 2023...

ஆஸ்திரேலியாவில் மின்சார வாகனங்களுக்கு புதிய வரி

ஆஸ்திரேலிய அரசாங்கம் மின்சார வாகன (EV) உரிமையாளர்கள் மீது சாலை பயனர் கட்டணம் விதிக்க ஒரு திட்டத்தை தயாரித்து வருகிறது. தனியார் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் எரிபொருள்...

இரவு நேர விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விமான நிறுவனம்

தொழில்துறை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் இரவு நேர விமானங்கள் பலவற்றை ரத்து செய்வதாக Air Canada தெரிவித்துள்ளது. கனடாவிலிருந்து நேற்று புறப்படவிருந்த பல நீண்ட தூர சர்வதேச...

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் – WA பள்ளியை முற்றுகையிட்ட போலீசார்

சமூக ஊடகங்களில் துப்பாக்கிச் சூடு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, பெர்த்தின் மிகப்பெரிய உயர்நிலைப் பள்ளிகளில் ஒன்றை நேற்று போலீசார் முற்றுகையிட்டனர். Mount Lawley Senior உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், ஒரு டீனேஜரால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ...

திடீரென விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானம் – பீதியடைந்த பயணிகள்

சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் செல்லும் விர்ஜின் ஆஸ்திரேலியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கேபினில் அழுத்தம் குறைந்ததால், பயணிகள் பீதியடைந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஸ்கைநியூஸ்...