Newsஇலங்கையில் நடைபெறவுள்ள 2024 சர்வதேச ஸ்ரீமத் பகவத் கீதை மகோற்சவம்

இலங்கையில் நடைபெறவுள்ள 2024 சர்வதேச ஸ்ரீமத் பகவத் கீதை மகோற்சவம்

-

2024 சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்து பக்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் ஸ்ரீமத் பகவத்கீதை தொடர்பாக சமய நிகழ்வுகள் மற்றும் ஸ்ரீமத் பகவத்கீதைக்கு வணக்கத்திற்குரிய மதிப்பளித்தலை வழங்குவதற்காக இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையால் வருடாந்தம் பகவத்கீதை மகோற்சவம் நடாத்தப்பட்டு வருகிறது.

அண்மைய ஆண்டுகளில் குறித்த மகோற்சவம் வெளிநாடுகளில் நடாத்தப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இலங்கையில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவின் ஹரியானா மாநில குருப்பிரிவு அபிவிருத்தி சபையின் நிதியனுசரணையுடன் 2024.03.01 தொடக்கம் 2024.03.03 வரை தாமரைத் தடாக வளாகத்தில் நடாத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...