Breaking Newsமகளின் படுக்கையறைக்கு வந்த பார்வையாளர்கள் - அதிர்ச்சியில் உரைந்த பெற்றோர்

மகளின் படுக்கையறைக்கு வந்த பார்வையாளர்கள் – அதிர்ச்சியில் உரைந்த பெற்றோர்

-

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஒரு தம்பதியினர், தங்கள் மகளின் படுக்கையறையில் கொடிய விஷப் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பழுப்பு நிற பாம்பு வீட்டின் தொலைக்காட்சி பெட்டிக்கு அடியில் சுருண்டு கிடந்தது, பின்னர் மகளின் படுக்கையறைக்கு சென்றது தெரியவந்துள்ளது.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவி பெறும் வரை பெற்றோர்கள் தங்கள் மகளின் அறையின் கதவை மூடிவிட்டு துணிகளை வெளியில் குவித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு உலகில் உள்ள கொடிய பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​விலங்குகள் குளிர்ச்சியை தேடிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், மெல்போர்னில் உள்ள ஒரு தாய் தனது குழந்தையின் அலமாரியில் பழுப்பு நிற பாம்பை கண்டெடுத்தார்.

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் அறிக்கைகளின்படி, 2000 மற்றும் 2016 க்கு இடையில், ஆஸ்திரேலியாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பாம்புக்கடி தொடர்பான இறப்புகள் பழுப்பு நிற பாம்புகளால் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...