Newsகுடிவரவு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை

குடிவரவு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை

-

அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

சட்டவிரோத குடியேற்றவாசிகளை காலவரையறையின்றி தடுத்து வைப்பதற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 149 புலம்பெயர்ந்தோரின் சரியான தகவல்களை சமர்ப்பிக்கத் தவறியதற்காக அவர் மீது குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் விளைவாக விடுவிக்கப்பட்டவர்கள் செய்த கடுமையான குற்றங்களின் சட்ட மற்றும் அரசியலமைப்பு சூழ்நிலைகள் அடங்கிய ஆவணம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பாராளுமன்ற சபையில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர் பீடர் டட்டன், குடிவரவு அமைச்சரை உடனடியாக அந்தப் பதவியில் இருந்து நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஆண்ட்ரூ, தடுப்புக்காவலில் உள்ள புலம்பெயர்ந்தோர் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு அப்பால் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில், அகதிகள் வரவேற்பு மையங்களில் பண மோசடி, துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கடந்த காலங்களில் அதிக விவாதத்திற்கு உட்பட்டவை.

Latest news

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் Woolworths மற்றும் Coles

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகு, Woolworths மற்றும் Coles நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் புதுப்பித்தல் செலவுகளைப் பதிவு செய்துள்ளன. 30,000 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்குவது தொடர்பாக...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...

பெர்த்தில் ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடைய நபர் படுகாயம்

பெர்த்தின் வடகிழக்கில் நடந்த ஒரு பணியிட சம்பவத்தில் 40 வயதுடையவர் என்று கருதப்படும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் Bassendean-இல் உள்ள ஆலிஸ் தெருவில் நடந்த இடத்திற்கு...