Newsவிக்டோரியாவில் வீட்டொன்றில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள்!

விக்டோரியாவில் வீட்டொன்றில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் சடலங்கள்!

-

விக்டோரியா மாநிலத்தில் பல்லாரட் அருகே உள்ள நிலத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு மோர்கன் தெருவில் உள்ள சொத்து ஒன்றில் 55 வயதுடைய ஆண் மற்றும் 42 வயதுடைய பெண் ஒருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக விக்டோரியா பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறந்த இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என போலீசார் கருதுகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இரகசியப் பொலிஸாருடன் இணைந்து மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவரும் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து இன்னும் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வரவில்லை என்று விக்டோரியா காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண் ஐந்து பிள்ளைகளின் தாய் என்பதுடன், இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குவாதம் மற்றும் முனகல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த மரணங்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள், குற்றத்தடுப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...