Newsபப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரிடையே மோதலில் 53 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரிடையே மோதலில் 53 பேர் உயிரிழப்பு

-

பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சண்டை அத்தீவின் எங்கா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. “பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்” என்றார்.

பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும்

மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு முன் எங்கா மாகாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பல்பொருள் அங்காடிகளில் காணப்படும் ஆபத்தான பொருட்கள் – மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி அலமாரிகளில் உள்ள உணவுகளில் மறைந்திருக்கும் "ஆபத்தான" மூலப்பொருள் பற்றிய புதிய கண்டுபிடிப்பை ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளனர். இந்த மூலப்பொருள் தொழில்துறை டிரான்ஸ் கொழுப்புகள் ஆகும்....

ஆஸ்திரேலியாவின் வசந்த காலத்தை சீர்குலைத்த வானிலை

இந்த வசந்த காலத்தில் ஆஸ்திரேலியா தொடர்ந்து கடுமையான புயல்களை எதிர்கொள்ளும் என்று வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இந்த வாரத்தின் கடைசி மூன்று நாட்களில் வடக்கு மற்றும் கிழக்குப்...

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

NSW-வில் திகில் சம்பவம் – வீட்டில் இறந்து கிடந்த பெண்

ஆஸ்திரேலியாவில் பெண்ணொருவர் வீட்டில் சந்தேகத்திற்கிடமான சூழலில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வடகிழக்கு நியூ சவுத் வேல்ஸின் South Crofton-இல் உள்ள ஒரு வீட்டிற்கு காவல்துறை அதிகாரிகள்...

மெல்பேர்ணில் போதைப்பொருள் ராணியாக மாறிய கவர்ச்சிப்பெண்

ஆஸ்திரேலியாவில் மெத் போதைப்பொருள் ராணி என்று கூறப்படும் Tess Rowlatt, புதிய குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். மெல்பேர்ணின் சவுத்பேங்கில் உயரமான அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து Tess Rowlatt...