Newsபப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரிடையே மோதலில் 53 பேர் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினரிடையே மோதலில் 53 பேர் உயிரிழப்பு

-

பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா, இந்தோனேசியா அருகிலுள்ள பப்புவா நியூ கினியா தீவில் அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சண்டை அத்தீவின் எங்கா மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. “பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், “பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்” என்றார்.

பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும்

மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.

இதற்கு முன் எங்கா மாகாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் Asbestos

ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக விற்கப்படும் பல குழந்தைகள் விளையாட்டு பொருட்களில் ஆபத்தான ஆஸ்பெஸ்டாஸ் இருப்பது சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, Wonder Co பிராண்டான Sensory...

புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சமூகத்திற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தர வதிவிடம்

கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளான Tuvalu-இன் முதல் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்ற அரசாங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. Tuvalu மற்றும்...

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...

தேசிய கீதம் தொடர்பாக வடகிழக்கு மாநிலப் பள்ளிகளுக்கான புதிய சட்டம்

வடக்குப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளும் கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கும் புதிய அரசாங்கக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. CLP...

புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு சமூகத்திற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நிரந்தர வதிவிடம்

கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளான Tuvalu-இன் முதல் குடியிருப்பாளர்களை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் கீழ் குடியேற்ற அரசாங்கம் சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது. Tuvalu மற்றும்...

உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறிய எலினா ரைபாகினா

2026 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு, கஜகஸ்தானின் Elena Rybakina உலக டென்னிஸ் தரவரிசையில் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். மெல்பேர்ணின் ராட் லேவர் அரங்கில் நடைபெற்ற...