Newsஉயிரிழந்த நண்பனுக்காக 10 ஆயிரம் டொலர் டிப்ஸ்

உயிரிழந்த நண்பனுக்காக 10 ஆயிரம் டொலர் டிப்ஸ்

-

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திலுள்ள ‘ தி மேசன் ஜார் கஃபே’ எனும் உணவகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மார்க் என்பவர், காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை 32 டொலர் பில்லுக்கு டிப்ஸ் பிரிவில் 10 ஆயிரம் டொலரை டிப்ஸாக கொடுத்துள்ளார்.

பொதுவாக அந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பில் தொகையில் 15% – 25% வரையிலேயே டிப்ஸ் வழங்குவது வழக்கம். ஆனால், மார்க் 30,835% டிப்ஸாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மேலாளர், அவ்வாடிக்கையாளரிடம் சென்று, “டிப்ஸ் தொகையில் 10 ஆயிரம் டொலர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தவறுதலாக எழுதிவிட்டீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “இல்லை. அந்தத் தொகையைத்தான் நான் டிப்ஸாக வழங்க விரும்புகிறேன்” என்றார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய நண்பர் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்குக்காகவே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன். நண்பரின் நினைவாக இந்த டிப்ஸை வழங்க விரும்பினேன்” என்றார்.

Latest news

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு புதிய கிரகத்தை ஆஸ்திரேலிய வானியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் புல்டோசர் விபத்தில் உயிரிழந்துள்ளார். துறைமுக வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு புல்டோசர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...