Breaking Newsவிக்டோரியாவுக்கு மீண்டும் புயல் அபாயம்

விக்டோரியாவுக்கு மீண்டும் புயல் அபாயம்

-

சமீபத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் விக்டோரியா மாநிலம் மீண்டும் புயல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது.

இன்று பிற்பகல் முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுகரமான புயல்களுக்குப் பிறகு, விக்டோரியா மாநிலத்தில் பலர் மின்சாரம் இல்லாமல் உள்ளனர், மற்றவர்கள் சேதத்தை சரிசெய்ய முயற்சிக்கின்றனர்.

கடந்த வாரம் வீசிய பேரழிவுப் புயலால் பாதிக்கப்பட்ட 99.5 சதவீத மின் விநியோகம் சீராகிவிட்டதாக மாநில எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் புயல் தீவிரமடைந்தால், மீண்டும் மின்சாரம் பாதிக்கப்படலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், வீட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பற்ற மரங்களை முடிந்தவரை வெட்டுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், விபத்துக்கள் குறைந்த பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்களையும் அனர்த்த திணைக்களம் அறிவித்துள்ளது.

சமீபத்திய பலத்த காற்றின் விளைவாக, மின் கம்பிகள் விழுந்து கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் வீடுகள் மின்சாரத்தை இழந்தன.

மாநிலம் முழுவதும் 37 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 2,500 பேர் இன்னும் மின்சாரம் இன்றி இருப்பதாகவும் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த வாரம் கிராமியஸ் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பல காட்டுத் தீயினால் 44க்கும் மேற்பட்ட வீடுகள் நாசமாகியுள்ளதுடன், இன்றைய மோசமான வானிலையால் காட்டுத் தீ அபாயம் அதிகரித்துள்ளது.

Latest news

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

சிட்னி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

சிட்னி Kingsford Smith விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. பல ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும்...