Newsவிண்வெளியில் பயணிக்க விரும்பும் 11 வயது எழுத்தாளர்.

விண்வெளியில் பயணிக்க விரும்பும் 11 வயது எழுத்தாளர்.

-

இங்கிலாந்தின் நோர்தாம்ப்டன் பகுதியை சேர்ந்த ஆஸ்டன் (Aston) எனும் சிறுவன், நரம்பியல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு உதவுவதற்காக, “திங்க்ஸ் அபவுட் ஸ்பேஸ்” (Things About Space) எனும் புத்தகத்தை தனது 8 ஆவது வயதில் எழுதி, படிப்பதற்கு சிரமம் உள்ளவர்களுக்கு அதன் ஒலி பதிப்பையும் வெளியிட்டு புகழ் பெற்றான்.

ஆஸ்டனின் புத்தகம், 700 பிரதிகளுக்கும் மேல் விற்று தீர்ந்தது. ஆஸ்டன் முதலில் எழுதிய பதிப்புகள் அனைத்தும் விற்று தீர்ந்ததால், கடந்த ஆண்டு, அதன் இரண்டாவது பதிப்பை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது.

“பல நண்பர்கள் அந்த புத்தகத்தைப் பற்றி கேட்டது எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது. புத்தகம் எழுதி வெளியிடுவது எப்படி என கேட்பவர்களுக்கு நான் சொல்வது, மனது வைத்தால் யாராலும் இதை செய்ய முடியும் என்பதுதான். என்றாவது ஒரு நாள் எதிர்காலத்தில் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம்” என ஆஸ்டன் வானொலி பேட்டியில் கூறினார்.

“ஆஸ்டனை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என ஆஸ்டனின் தாயார் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் விண்வெளி வீரர் Tim Peake ஆஸ்டனின் புத்தகத்தை குறித்து கேள்விப்பட்டு அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதுடன், ஆஸ்டனின் புத்தகத்தின் பிரதியில் கையெழுத்திட்டு வாழ்த்தினார்.

ஆஸ்டனுக்கு சில குழந்தைகளை தாக்கும் அபூர்வ வளர்ச்சி குறைபாட்டு நோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 11 வயது ஆகும் ஆஸ்டன் எழுதிய புத்தகத்தின் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் 1000 யூரோக்களை இங்கிலாந்து வானியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக ஆஸ்டனின் பெற்றோர் வழங்கினர்.

ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அந்த புத்தகத்தின் பல பிரதிகளை வாங்கி உள்ளூர் பள்ளிகளில் விநியோகித்தார்.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் ஒட்டத் தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் பழங்களுக்கு பிளாஸ்டிக் ஸ்டிக்கர்கள் தடை செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம், விவசாயிகள் அதிக செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது. ஸ்டிக்கர்களின் விலை உயர்வு சந்தைக்கு பொருட்களை...

AI Botகளைப் பயன்படுத்தி மோசடியைப் பிடிக்க தயாராகும் வங்கி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கியான காமன்வெல்த் வங்கி, AI பாட்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசி மோசடியால் இழக்கப்படும் மில்லியன் கணக்கான...

விமானத்தில் கடத்தி வரப்பட்ட அணில் குரங்கு

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட அணில் குரங்கு, திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக தகவல்...

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் முதல் அமுலுக்குவரும் பல சலுகைகள்

செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, ஒரு புதிய நிதியாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது, எனவே மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் அரசாங்கத்திடமிருந்து அதிக நிவாரணங்களைப் பெற உள்ளனர். குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்தல்,...

தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி போடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

பிரபலமான ஐரோப்பிய சுற்றுலா தலங்களில் Hepatitis A பரவுவதால், ஆஸ்திரேலியர்கள் உடனடியாக தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ஜெர்மனி மற்றும் பல...

ஆஸ்திரேலியாவில் வருமானவரி செலுத்தாமல் உள்ள பல மில்லியனர்கள் 

2022-23 நிதியாண்டில் ஆஸ்திரேலியர்கள் கால் டிரில்லியன் டாலர்களுக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளனர். ஆனால் ஒரு பைசா கூட செலுத்தாத டஜன் கணக்கான மில்லியனர்கள் உள்ளனர்...