Newsகாஸாவில் பலி எண்ணிக்கை 30,000ஐ தாண்டிய நிலையில் மற்றொரு சோகம்

காஸாவில் பலி எண்ணிக்கை 30,000ஐ தாண்டிய நிலையில் மற்றொரு சோகம்

-

மேற்கு காசா பகுதியில் உணவு விநியோகம் செய்யும் டிரக்கை சுற்றி மக்கள் திரண்டதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 112 பேர் பலியாகினர்.

மேலும் 760க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்,
மோதல் தொடங்கியதில் இருந்து காஸாவில் ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

உணவைப் பெற முயற்சிக்கும் பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது நியாயமற்றது என்று பிரான்ஸ் கூறியது, மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இந்தச் சம்பவம் தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான தலையீட்டாளர்களின் முயற்சிகளை சிக்கலாக்கும் என்று கவலை தெரிவித்தார்.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி மோதல் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு கூறுகிறது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த 6 குழந்தைகளும் காசா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனை முற்றாக செயலிழந்து இந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் 7 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முடியாமல் போனது இந்த நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...