Newsலீப் தினத்தில் பிறந்த தாய்க்கு லீப் தினத்தில் பிறந்த குழந்தை

லீப் தினத்தில் பிறந்த தாய்க்கு லீப் தினத்தில் பிறந்த குழந்தை

-

40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப் பேராசிரியரும், வாத நோய் நிபுணருமான வைத்தியர் கை சன் மற்றும் அவரது கணவர் மைக்கேல் பெய்க் ஆகியோர் பிப்ரவரி 29 அன்று காலை 5.12 மணிக்கு, அவர்களது மூன்றாவது குழந்தையான சோலி என்ற மகளை பெற்றெடுத்தனர்.

இது குறித்து, சன் கூறியதாவது, பேபி சோலி பிப்ரவரி 26 அன்று பிறக்கவிருந்தார் எனினும் என் பிறந்தநாளில் அவள் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நானும் என் கணவரும் சொல்லிக்கொண்டிருந்தோம். எப்படியோ, அது நடந்தது,” என்றார்.

சன் மற்றும் அவரது மகளும் ஒரே பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்வதற்கான நிகழ்தகவு மிகவும் குறைவாகவே உள்ளது, ஏனெனில் பிப்ரவரி 29 ஒருவருக்கு இருக்கக்கூடிய மிக அரிதான பிறந்தநாள். இருப்பினும், குறைந்தது 5 மில்லியன் மக்கள் தங்கள் பிறந்தநாளை லீப் நாளில் கொண்டாடுகிறார்கள். பெப்ரவரி 29 அன்று ஒருவர் பிறப்பதற்கான வாய்ப்புகள் 1இல் 1,461 என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...