Breaking News170 பெண்கள், குழந்தைகளின் உயிர்களை பலிவாங்கிய தாக்குதல்

170 பெண்கள், குழந்தைகளின் உயிர்களை பலிவாங்கிய தாக்குதல்

-

புர்கினா பாசோவில் மூன்று கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 170 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொம்சில்கா, நோர்டின் மற்றும் சோரோவில் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க உதவுவதற்கு சாட்சிகளை ஒரு அரசாங்க வழக்கறிஞர் கேட்டார்.

நகர்ப்புறங்களில் தாக்குதல்கள் உட்பட தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் ராணுவ தளபதிகள் எச்சரித்துள்ளனர்.

2022 இல் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிய போதிலும், புர்கினா பாசோவின் மூன்றில் ஒரு பங்கு இன்னும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பெப்ரவரி 25 ஆம் திகதி யதெங்கா மாகாணத்தில் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பின்னால் எந்தக் குழு உள்ளது என்பது இதுவரையில் வெளியாகவில்லை.

தீவிரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த அதிக ஆபத்து உள்ளதால், உஷாராக இருக்கும்படி அந்நாட்டு ராணுவ தளபதி வெள்ளிக்கிழமை தனது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நகரங்களில் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்கள் தொடரும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புர்கினா பாசோவின் நெருக்கடியானது உலகில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட நெருக்கடிகளில் ஒன்றாகும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பல ஆண்டுகளாக பரவலான பாதுகாப்பின்மையால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், ஐ.நா அறிக்கைகளின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கால் பகுதியினர் பட்டினியால் வாடும் அபாயத்தில் உள்ளனர்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று உறுதியளித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய போதிலும், வன்முறை இன்னும் நீடிக்கிறது.

Latest news

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

மெல்போர்னில் 7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய லாரி ஓட்டுநர் நிரபராதியா?

7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய பள்ளிப் பேருந்து விபத்தில் லாரி ஓட்டுநரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மே 2023 இல் மெல்பேர்ணின் மேற்கில் ஒரு பள்ளிப் பேருந்தும்...

Cannes சிவப்பு கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடை

கண்ணியம் கருதி கேன்ஸ் Cannes கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விழாவிற்கு ஒரு நாள் முன்புதான் நிர்வாணம் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது. "கண்ணியத்தின் காரணங்களுக்காக, சிவப்பு கம்பளத்தில்...