Breaking Newsவாழ்க்கைச் செலவு காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள முதியோர்

வாழ்க்கைச் செலவு காரணமாக கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள முதியோர்

-

அவுஸ்திரேலியாவின் முதியோர்களில் 80 வீதமானோர் வாழ்க்கைச் செலவுகள் வேகமாக அதிகரித்து வருவதால் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதையும் உள்ளடக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட 5,700 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள், எரிபொருள் உள்ளிட்ட எரிசக்திக் கட்டணங்கள் மற்றும் சுகாதாரச் செலவுகள் ஆகியவை முக்கியப் பிரச்சனைகளாக இருப்பதாகவும், வீட்டுவசதிப் பிரச்சினையும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயமாக இருப்பதாக கணக்கெடுப்பில் பங்களித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொலைதூர பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை அதிகரிக்காமல், காலாண்டுக்கு ஒருமுறை அதாவது வருடத்திற்கு 04 முறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...