Newsஆயிரம் அமெரிக்க வீரர்களுடன் காசா பகுதிக்கு சென்றுள்ள கப்பல்

ஆயிரம் அமெரிக்க வீரர்களுடன் காசா பகுதிக்கு சென்றுள்ள கப்பல்

-

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதற்கான துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான உபகரணங்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் கடலோரப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில் இந்தக் கப்பல் வருகிறது.

அதேநேரம், 200 தொன் உணவு மற்றும் மாவுகளை ஏற்றிச் செல்லும் உதவிக் கப்பல் ஒன்று இன்று காசா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

பாலஸ்தீன குடிமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களின் கீழ் வாழும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு துறைமுகம் ஒரு புதிய கடல் வழியை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலம் மூலம் உதவிகளை வழங்குவதில் பாரிய தடைகளை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காசா பகுதிக்கான உதவிப் பொருட்களை அணுகுவதை எளிதாக்குமாறும், தங்கள் கான்வாய்கள் அந்தப் பகுதிக்குள் பாதுகாப்பாக பயணிக்க அனுமதிக்குமாறும் உதவி நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தற்காலிக துறைமுகத்தை நிர்மாணிப்பதில் 1,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈடுபடலாம் என்றும், அவர்களில் யாரும் தரை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பென்டகன் கூறியுள்ளது.

திட்டமிடப்பட்ட படகு சரியான இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மிதக்கும் படகு நிலப்பகுதியுடன் தற்காலிக தரைப்பாதை மூலம் இணைக்கப்படும் என்று அமெரிக்க ஊடக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

பிளாஸ்டிக் குடிநீர் குழாய்களுக்காக பிரபல ஆஸ்திரேலிய உணவகத்திற்கு அபராதம்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்காக ஆஸ்திரேலியாவின் பிரபலமான உணவகச் சங்கிலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Bubble tea மற்றும் பேக்கரி சங்கிலியான Top Tea-இற்கு $2,035 அபராதம்...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...