Newsஆயிரம் அமெரிக்க வீரர்களுடன் காசா பகுதிக்கு சென்றுள்ள கப்பல்

ஆயிரம் அமெரிக்க வீரர்களுடன் காசா பகுதிக்கு சென்றுள்ள கப்பல்

-

காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதற்கான துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான உபகரணங்களை ஏற்றிச் செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் கடலோரப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில் இந்தக் கப்பல் வருகிறது.

அதேநேரம், 200 தொன் உணவு மற்றும் மாவுகளை ஏற்றிச் செல்லும் உதவிக் கப்பல் ஒன்று இன்று காசா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

பாலஸ்தீன குடிமக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக காஸா பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதல்களின் கீழ் வாழும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு துறைமுகம் ஒரு புதிய கடல் வழியை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலம் மூலம் உதவிகளை வழங்குவதில் பாரிய தடைகளை எதிர்நோக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

காசா பகுதிக்கான உதவிப் பொருட்களை அணுகுவதை எளிதாக்குமாறும், தங்கள் கான்வாய்கள் அந்தப் பகுதிக்குள் பாதுகாப்பாக பயணிக்க அனுமதிக்குமாறும் உதவி நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

தற்காலிக துறைமுகத்தை நிர்மாணிப்பதில் 1,000 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஈடுபடலாம் என்றும், அவர்களில் யாரும் தரை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் பென்டகன் கூறியுள்ளது.

திட்டமிடப்பட்ட படகு சரியான இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு மிதக்கும் படகு நிலப்பகுதியுடன் தற்காலிக தரைப்பாதை மூலம் இணைக்கப்படும் என்று அமெரிக்க ஊடக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...