Melbourneமெல்போர்னில் போராட்டங்களுக்கு இடையே பிறந்த குழந்தை

மெல்போர்னில் போராட்டங்களுக்கு இடையே பிறந்த குழந்தை

-

காலநிலை அவசரநிலையை பிரகடனப்படுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்தி மெல்போர்னில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது ஒரு குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வாரமாக நீடித்த போராட்டம் இன்று மதியம் நடைபவனிக்கு பின் முடிவுக்கு வந்தது.

மாலை 4 மணியளவில் டிராம் தண்டவாளத்தின் நடுவே போராட்டக்காரர்கள் குழுவொன்று அமர்ந்திருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் மாலை 5 மணியளவில் ஃபிளிண்டர்ஸ் தெருவில் இருந்து புறப்பட்ட போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டம் தொடங்கிய பூங்காவை நோக்கி சென்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரவூர்தியைப் பயன்படுத்தி வீதியின் போக்குவரத்தைத் தடை செய்ததாகவும் இதனால் ஆயிரக்கணக்கானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு செல்லும் வழியில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, காரிலேயே பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார்.

ஆம்புலன்ஸ் மூலம் அவர் குழந்தையுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Latest news

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...

பசுமைத் தொட்டியின் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு

பச்சை நிற குப்பைத் தொட்டிகளை சரியாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய கவுன்சில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பிரிஸ்பேர்ணில் உள்ள Redland நகர சபையில் உள்ள கழிவுத் தொழிலாளர்கள் சமீபத்தில் சாலையின்...

பெர்த் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தை அடுத்து, காவல்துறைக்கு உதவும் பெண்

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதியில் மழைநீர் வடிகாலில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 30 வயதுடைய ஒரு பெண், போலீசாரின் விசாரணையில்...

விமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி – அலட்சியமாக பதிலளித்த விமான ஊழியர்கள்

IndiGo விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது...