CinemaAI தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்காக பயன்படுத்த முடியும் - A.R.ரஹ்மான்

AI தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்காக பயன்படுத்த முடியும் – A.R.ரஹ்மான்

-

‘The Goat Life’ படத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “AI தொழில்நுட்பத்தை முன்னேற்றத்துக்கு பயன்படுத்த முடியும் என்று நான் நினைக்கிறேன். நம்மிடையே தலைமுறை தலைமுறையாக உள்ள அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்க முடியும்.

AI தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வேலைகளை பறிக்காமல் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் அவர்களை வளர்ப்பதும்தான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன். தலைவர்களாகவும், வேலை வழங்குபவர்களாகவும் யாருடைய வேலையும் போகக்கூடாது என்பதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நேரம் தேவைப்படும் விஷயங்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் நாம் அதைப் பயன்படுத்த வேண்டும். கலையில் கூட, நீங்கள் எதையாவது உருவாக்குகிறீர்கள் என்றால், அதற்கான பயணத்தை கற்பனை செய்வது இப்போது மிகவும் எளிதானது. நீங்கள் அதை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லலாம். நாம் AI தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டுமே தவிர அதைக் கொண்டு மனிதர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது” என்று அவர் பேசியுள்ளார்.

லால் சலாம் திரைப்படத்தில் ‘திமிரி ஏழுடா’ என்ற பாடலுக்காக மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோரின் குரல்களை மீண்டும் உருவாக்க AI தொழில்நுட்பத்தை ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...