Newsஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் - குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

ஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் – குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

-

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரையும், சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வுஸ்திரேலியாவில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வந்த 36 வயதான Chaitanya Madhagani கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை உயிரிழந்த சைதன்யாவின் உடல் விக்டோரியாவின் Buckley பகுதியில் உள்ள Mount Pollock Road ஓர குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் சைதன்ய மதகனியின் கணவர் தனது குழந்தையை அழைத்து கொண்டு இந்தியாவின் ஹைதராபாத்துக்கு திரும்பியதும், அங்கு சைதன்யாவின் பெற்றோர்களிடம் குழந்தைகளை விட்டு விட்டு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தின் Uppal பகுதி MLA Bandari Lakshma Reddy, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அத்துடன் சைதன்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாட்டிற்காக வெளியுறவு அமைச்சகத்திற்கு பெற்றோர் சார்பாக கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சைதன்யாவின் பெற்றோர் அளித்த தகவலின் படி, தங்கள் மகளை கொன்று விட்டதாக அவர்களது மருமகன் ஒப்புக்கொண்டதாக MLA தெரிவித்தார். ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

பாயிண்ட் குக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது குற்றக் களமாக சந்தேகிக்கப்படுகிறது, அங்குதான் கொலை நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளியின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், கணவரின் திடீர் இந்திய பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...