Newsஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் - குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

ஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் – குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

-

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரையும், சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வுஸ்திரேலியாவில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வந்த 36 வயதான Chaitanya Madhagani கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை உயிரிழந்த சைதன்யாவின் உடல் விக்டோரியாவின் Buckley பகுதியில் உள்ள Mount Pollock Road ஓர குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் சைதன்ய மதகனியின் கணவர் தனது குழந்தையை அழைத்து கொண்டு இந்தியாவின் ஹைதராபாத்துக்கு திரும்பியதும், அங்கு சைதன்யாவின் பெற்றோர்களிடம் குழந்தைகளை விட்டு விட்டு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தின் Uppal பகுதி MLA Bandari Lakshma Reddy, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அத்துடன் சைதன்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாட்டிற்காக வெளியுறவு அமைச்சகத்திற்கு பெற்றோர் சார்பாக கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சைதன்யாவின் பெற்றோர் அளித்த தகவலின் படி, தங்கள் மகளை கொன்று விட்டதாக அவர்களது மருமகன் ஒப்புக்கொண்டதாக MLA தெரிவித்தார். ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

பாயிண்ட் குக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது குற்றக் களமாக சந்தேகிக்கப்படுகிறது, அங்குதான் கொலை நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளியின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், கணவரின் திடீர் இந்திய பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...