Newsஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் - குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

ஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் – குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

-

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரையும், சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வுஸ்திரேலியாவில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வந்த 36 வயதான Chaitanya Madhagani கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை உயிரிழந்த சைதன்யாவின் உடல் விக்டோரியாவின் Buckley பகுதியில் உள்ள Mount Pollock Road ஓர குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் சைதன்ய மதகனியின் கணவர் தனது குழந்தையை அழைத்து கொண்டு இந்தியாவின் ஹைதராபாத்துக்கு திரும்பியதும், அங்கு சைதன்யாவின் பெற்றோர்களிடம் குழந்தைகளை விட்டு விட்டு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தின் Uppal பகுதி MLA Bandari Lakshma Reddy, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அத்துடன் சைதன்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாட்டிற்காக வெளியுறவு அமைச்சகத்திற்கு பெற்றோர் சார்பாக கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சைதன்யாவின் பெற்றோர் அளித்த தகவலின் படி, தங்கள் மகளை கொன்று விட்டதாக அவர்களது மருமகன் ஒப்புக்கொண்டதாக MLA தெரிவித்தார். ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

பாயிண்ட் குக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது குற்றக் களமாக சந்தேகிக்கப்படுகிறது, அங்குதான் கொலை நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளியின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், கணவரின் திடீர் இந்திய பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...