Newsஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் - குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

ஹைதராபாத் இளம்பெண் அவுஸ்திரேலியாவில் மரணம் – குழந்தையுடன் தப்பி ஓடிய கணவன்

-

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடும்பத்தினரையும், சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வுஸ்திரேலியாவில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வந்த 36 வயதான Chaitanya Madhagani கொலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை உயிரிழந்த சைதன்யாவின் உடல் விக்டோரியாவின் Buckley பகுதியில் உள்ள Mount Pollock Road ஓர குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையில் சைதன்ய மதகனியின் கணவர் தனது குழந்தையை அழைத்து கொண்டு இந்தியாவின் ஹைதராபாத்துக்கு திரும்பியதும், அங்கு சைதன்யாவின் பெற்றோர்களிடம் குழந்தைகளை விட்டு விட்டு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தின் Uppal பகுதி MLA Bandari Lakshma Reddy, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

அத்துடன் சைதன்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாட்டிற்காக வெளியுறவு அமைச்சகத்திற்கு பெற்றோர் சார்பாக கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சைதன்யாவின் பெற்றோர் அளித்த தகவலின் படி, தங்கள் மகளை கொன்று விட்டதாக அவர்களது மருமகன் ஒப்புக்கொண்டதாக MLA தெரிவித்தார். ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது இந்த கொலை வழக்கை விசாரித்து வருகிறது.

பாயிண்ட் குக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டாவது குற்றக் களமாக சந்தேகிக்கப்படுகிறது, அங்குதான் கொலை நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கொலையின் பின்னணி மற்றும் குற்றவாளியின் அடையாளம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இருப்பினும், கணவரின் திடீர் இந்திய பயணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news

பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படும் உடல்நல அச்சுறுத்தல்கள்

வீட்டில் கிடைக்கும் ஆன்டிபயாடிக் உலகின் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) 2019 ஆம் ஆண்டில் 1.27 மில்லியன் உலகளாவிய இறப்புகளுக்கு பாக்டீரியா...

பறவைக் காய்ச்சல் தொற்றுக்நோய்க்கு முன்னெச்சரிக்கையாக தயாராகும் ஆஸ்திரேலியா

உலகெங்கிலும் பரவி வரும் H5 பறவைக் காய்ச்சல் தொற்றுநோயைத் தடுக்க ஆஸ்திரேலியாவைத் தயார்படுத்துவதற்காக, உயிரியல் பாதுகாப்புத் திட்டத்திற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளன. இந்த...

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் இரண்டு முறை வரி செலுத்த வேண்டுமா?

வரும் நாட்களில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறியுள்ளார். அதன்படி, பெட்ரோல் வாகன பயனர்களுக்கு...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரியாவில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று கிறிஸ்துமஸுக்கு முன்பு 3,500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது. Australia Post தனது பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த...