Newsதீ அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் Mercedes Benz பல மாடல்கள்

தீ அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் Mercedes Benz பல மாடல்கள்

-

1983 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் தீ அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்டன.

தீயை ஏற்படுத்தக்கூடிய உற்பத்திக் குறைபாடு காரணமாக 8 Mercedes Benz மாடல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வாகனங்களில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட 8 Mercedes Benz C-Class, E-Class, S-Class, SL, CLE, EQE, EQS மற்றும் AMG மாடல்கள் அடங்கும்.

உள்ளக தொழிநுட்பக் கோளாறினால் வாகனம் ஓட்டும் போது தீப்பிடித்து எரியும் அபாயம் உள்ளதாக வெளியான தகவல் காரணமாக வாகனங்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தை ஓட்டும் சாரதிகள் மற்றும் வீதியில் பயணிக்கும் ஏனைய வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்துக்கள் அதிகரிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mercedes Benz இணையத்தளத்தில் கிடைக்கக்கூடிய வாகனங்களின் VIN எண்கள் அடங்கிய பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் தொடர்புடைய வாகன விற்பனையாளர்களைத் தொடர்புகொண்டு புதிய ஒன்றை இலவசமாகப் பெற முடியும்.

இது பற்றிய கூடுதல் தகவல்களை Mercedes Benz வாடிக்கையாளர் சேவை மையங்களை 1300 762718 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...