Newsவெளியானது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்!

வெளியானது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்!

-

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

ஐ.நாவின் வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் உலகின் மகிழ்ச்சியான நாடாகவுள்ளது.

அந்தவகையில் முறையே

  1. பின்லாந்து
  2. டென்மார்க்
  3. ஐஸ்லாந்து
  4. சுவீடன்
  5. இஸ்ரேல்
  6. நெதர்லாந்து
  7. நோர்வே
  8. லக்ஸம்பேர்க்
  9. சுவிட்சர்லாந்து
  10. அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

2020 இல் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பையேற்று, மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜேர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை.

முறையே 23 மற்றும் 24 ஆவது இடத்திலிருந்து வருகின்றன. கோஸ்டாரிகா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் 12 மற்றும் 13ஆம் இடங்களிலுள்ளன.

மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...