Newsவெளியானது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்!

வெளியானது உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்!

-

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

ஐ.நாவின் வருடாந்த உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகளின் அடிப்படையில் 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் உலகின் மகிழ்ச்சியான நாடாகவுள்ளது.

அந்தவகையில் முறையே

  1. பின்லாந்து
  2. டென்மார்க்
  3. ஐஸ்லாந்து
  4. சுவீடன்
  5. இஸ்ரேல்
  6. நெதர்லாந்து
  7. நோர்வே
  8. லக்ஸம்பேர்க்
  9. சுவிட்சர்லாந்து
  10. அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

2020 இல் தலிபான்கள் ஆட்சிப்பொறுப்பையேற்று, மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளுக்கும் மேலாக அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜேர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை.

முறையே 23 மற்றும் 24 ஆவது இடத்திலிருந்து வருகின்றன. கோஸ்டாரிகா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் 12 மற்றும் 13ஆம் இடங்களிலுள்ளன.

மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...