SportsIPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

IPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

-

ஐ.பி.எல். 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த புதிய இரண்டு விதிகளைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இம்பாட் வீரர் என்ற விதியை அறிமுகப்படுத்தியமைகுறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு சம்பியன் பட்டம் பெற்ற சி.எஸ்.கே. அணியும் ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் இன்று(22) மோதவுள்ளது

  1. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்

பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்களை வீசலாம். முன்னதாக ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும். 2வது வீசப்படும் பவுன்ஸர் நோ பால் ஆக அறிவிக்கப்படும். இனிமேல் 3வது ஆக வீசப்படும் பவுன்ஸர் மட்டுமே நோ பால் ஆகும்.

பந்து வீச்சாளருக்கு இது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் சோதனை அடிப்படையில் 2023-24 சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே இதனை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.

  1. ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்

ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.

தொலைக்காட்சி நடுவா்களுக்கு இந்த முறை கூடுதல் காட்சிகளும், குறிப்பாக ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகளும் அளிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு களத்தடுப்பாளர் பவுண்டரி கோட்டை ஒட்டிய வகையில் பந்தை பிடிக்கும்போது, அவரது கைகள் பந்தை பிடிப்பது ஒரு பக்கமும், கால்கள் பவுண்டரி கோட்டை நெருங்கியிருப்பதை மறுபக்கமும் என ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டும். இது தெளிவான முடிவை நடுவா் மேற்கொள்ள உதவும். ஓவா் த்ரோ போன்ற சூழ்நிலைகளிலும் இது உதவும்.வழக்கமாக மைதானம் முழுவதும் 8 அதிவேக ‘ஹாக்-ஐ’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

பொதுவாக அவை ‘பால் டிராக்கிங்’, ‘அல்ட்ரா எட்ஜ்’ ஆகியவற்றுக்காக மட்டுமே பிரதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஸ்டம்ப்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவா்த்ரோ போன்ற சூழ்நிலைகளில், தொலைக்காட்சி நேரலைக்கான ஒளிப்பதிவின் காட்சிகளையே நடுவா் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மேற்கூறிய அனைத்து சூழ்நிலைகளிலுமே ஹாக்-ஐ கேமரா பதிவுகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும்.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் 2 வாரங்களுக்குப் பிறகு காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெர்மன் பெண்!

மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூரப் பகுதியில் இரண்டு வாரங்களாக காணாமல் போன ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். Carolina Wilga நீரிழப்புடன் இருந்ததாகவும், மிகவும் பலவீனமாக இருந்ததாகவும்,...

ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் இதுதான்!

கடந்த மாதம் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் குறித்த முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் வெளியிட்டுள்ளது. CNN பெற்ற அறிக்கையின்படி, விமானியின் காக்பிட்டில்...

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

வீட்டு விலைகள் முதல் முறையாக $1 மில்லியனைத் தாண்டியுள்ள மாநிலத் தலைநகரம்

பிரிஸ்பேர்ண் நகரில் முதல் முறையாக சராசரி வீட்டு விலைகள் ஏழு இலக்க, பல மில்லியன் டாலர் மதிப்பிலான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கோட்டாலிட்டியின் பகுப்பாய்வின்படி, குயின்ஸ்லாந்து தலைநகரில்...