SportsIPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

IPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

-

ஐ.பி.எல். 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த புதிய இரண்டு விதிகளைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இம்பாட் வீரர் என்ற விதியை அறிமுகப்படுத்தியமைகுறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு சம்பியன் பட்டம் பெற்ற சி.எஸ்.கே. அணியும் ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் இன்று(22) மோதவுள்ளது

  1. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்

பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்களை வீசலாம். முன்னதாக ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும். 2வது வீசப்படும் பவுன்ஸர் நோ பால் ஆக அறிவிக்கப்படும். இனிமேல் 3வது ஆக வீசப்படும் பவுன்ஸர் மட்டுமே நோ பால் ஆகும்.

பந்து வீச்சாளருக்கு இது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் சோதனை அடிப்படையில் 2023-24 சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே இதனை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.

  1. ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்

ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.

தொலைக்காட்சி நடுவா்களுக்கு இந்த முறை கூடுதல் காட்சிகளும், குறிப்பாக ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகளும் அளிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு களத்தடுப்பாளர் பவுண்டரி கோட்டை ஒட்டிய வகையில் பந்தை பிடிக்கும்போது, அவரது கைகள் பந்தை பிடிப்பது ஒரு பக்கமும், கால்கள் பவுண்டரி கோட்டை நெருங்கியிருப்பதை மறுபக்கமும் என ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டும். இது தெளிவான முடிவை நடுவா் மேற்கொள்ள உதவும். ஓவா் த்ரோ போன்ற சூழ்நிலைகளிலும் இது உதவும்.வழக்கமாக மைதானம் முழுவதும் 8 அதிவேக ‘ஹாக்-ஐ’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

பொதுவாக அவை ‘பால் டிராக்கிங்’, ‘அல்ட்ரா எட்ஜ்’ ஆகியவற்றுக்காக மட்டுமே பிரதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஸ்டம்ப்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவா்த்ரோ போன்ற சூழ்நிலைகளில், தொலைக்காட்சி நேரலைக்கான ஒளிப்பதிவின் காட்சிகளையே நடுவா் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மேற்கூறிய அனைத்து சூழ்நிலைகளிலுமே ஹாக்-ஐ கேமரா பதிவுகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும்.

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...