SportsIPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

IPL 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகள்

-

ஐ.பி.எல். 2024 போட்டியில் இரண்டு புதிய விதிகளைச் சேர்க்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் ஊட்டுவதற்காக இந்த புதிய இரண்டு விதிகளைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இம்பாட் வீரர் என்ற விதியை அறிமுகப்படுத்தியமைகுறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு சம்பியன் பட்டம் பெற்ற சி.எஸ்.கே. அணியும் ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் இன்று(22) மோதவுள்ளது

  1. ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்கள்

பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்ஸர்களை வீசலாம். முன்னதாக ஒரு பவுன்ஸர் மட்டுமே வீச வேண்டும். 2வது வீசப்படும் பவுன்ஸர் நோ பால் ஆக அறிவிக்கப்படும். இனிமேல் 3வது ஆக வீசப்படும் பவுன்ஸர் மட்டுமே நோ பால் ஆகும்.

பந்து வீச்சாளருக்கு இது கூடுதல் சௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை சையத் முஷ்டாக் அலி கிண்ணத்தில் சோதனை அடிப்படையில் 2023-24 சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் நல்ல வரவேற்பு கிடைக்கவே இதனை ஐபிஎல் போட்டிகளில் சேர்க்க பிசிசிஐ அனுமதியளித்துள்ளது.

  1. ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்

ஐபிஎல் சீசனில், ஆட்டத்தின்போதான கள முடிவுகளை நடுவா்கள் விரைவாகவும், துல்லியமாகவும் மேற்கொள்வதற்கு வசதியாக ‘ஸ்மாா்ட் ரீப்ளே சிஸ்டம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மைதானத்திலுள்ள 8 ‘ஹாக்-ஐ’ கேமராவின் காட்சிகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும். இதற்காக, அந்த ஒளிப்பதிவுகளை கையாளும் இரு நிபுணா்களும் தொலைக்காட்சி நடுவரின் உடனேயே இருப்பாா்கள். இதற்கு முன் இந்த இரு தரப்புக்கும் இடையே தொலைக்காட்சி ஒளிபரப்பு இயக்குநா் தொடா்பாளராக இருந்த நிலையில், இந்த முறை அவரின் தலையீடு இருக்காது. இதனால் முடிவுகளை துரிதமாக மேற்கொள்ளலாம்.

தொலைக்காட்சி நடுவா்களுக்கு இந்த முறை கூடுதல் காட்சிகளும், குறிப்பாக ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகளும் அளிக்கப்படவுள்ளது. உதாரணமாக, ஒரு களத்தடுப்பாளர் பவுண்டரி கோட்டை ஒட்டிய வகையில் பந்தை பிடிக்கும்போது, அவரது கைகள் பந்தை பிடிப்பது ஒரு பக்கமும், கால்கள் பவுண்டரி கோட்டை நெருங்கியிருப்பதை மறுபக்கமும் என ‘ஸ்ப்லிட் ஸ்கிரீன்’ காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டும். இது தெளிவான முடிவை நடுவா் மேற்கொள்ள உதவும். ஓவா் த்ரோ போன்ற சூழ்நிலைகளிலும் இது உதவும்.வழக்கமாக மைதானம் முழுவதும் 8 அதிவேக ‘ஹாக்-ஐ’ கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

பொதுவாக அவை ‘பால் டிராக்கிங்’, ‘அல்ட்ரா எட்ஜ்’ ஆகியவற்றுக்காக மட்டுமே பிரதானமாக இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்தன. ஸ்டம்ப்பிங், ரன் அவுட், கேட்ச், ஓவா்த்ரோ போன்ற சூழ்நிலைகளில், தொலைக்காட்சி நேரலைக்கான ஒளிப்பதிவின் காட்சிகளையே நடுவா் ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இந்த முறை மேற்கூறிய அனைத்து சூழ்நிலைகளிலுமே ஹாக்-ஐ கேமரா பதிவுகள் தொலைக்காட்சி நடுவருக்கு நேரடியாகவே வழங்கப்படும்.

Latest news

இந்த வாரம் விக்டோரியாவில் அதிகரிக்கப்பட உள்ள போக்குவரத்துச் சட்டங்கள்

AFL Grand Final நடைபெறும் நாளில் விக்டோரியாவில் பாதுகாப்பை பலப்படுத்த போலீசார் ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். "Operation Scoreboard" என்று அழைக்கப்படும் இந்த...

கட்டுமானத் துறையில் பெண்களுக்கு அதிக சம்பளம்

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக கட்டிடம் மற்றும் கட்டுமானத் துறையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசாங்கம் நம்புகிறது. கட்டிடக் கட்டுமானத் துறையில் பெண்கள் 13% மட்டுமே...

டெஸ்லா “Self-Driving” update தொடர்பான விக்டோரியன் சட்டம்

Tesla கார்களுக்கான புதுப்பிக்கப்பட்ட Full Self-Driving (Supervised) மென்பொருளைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு சட்டங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய Tesla...

“உலக சர்வாதிகாரிகள் போர் என்ற போர்வையில் நாடுகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்” – பிரதமர் அல்பானீஸ்

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகின் நடுத்தர சக்திகளும் சிறிய நாடுகளும் வல்லரசுகளுடன் நிற்க வேண்டும்...

“உலக சர்வாதிகாரிகள் போர் என்ற போர்வையில் நாடுகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்” – பிரதமர் அல்பானீஸ்

நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகின் நடுத்தர சக்திகளும் சிறிய நாடுகளும் வல்லரசுகளுடன் நிற்க வேண்டும்...

அவசரநிலையைச் சமாளிக்க ஆஸ்திரேலியர்களிடம் பணம் இல்லை என கூறும் கணக்கெடுப்பு 

நிதி அவசரநிலையைச் சமாளிக்க மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பணம் இல்லாமல் தவிப்பது தெரியவந்துள்ளது. வேலை இழப்பு அல்லது நோய் காரணமாக அவர்கள் உடனடி பொருளாதார நெருக்கடியில் விழும்...