Sportsமுதல் வெற்றியை பதிவு செய்தது CSK - IPL 2024

முதல் வெற்றியை பதிவு செய்தது CSK – IPL 2024

-

2024 IPL தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களும் விளாசினர். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியில், தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 15 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார்.

ரஹானே 19 பந்துகளில் 27 ஓட்டங்களும், மிட்செல் 22 ஓட்டங்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா, தூபே சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இருவரின் மிரட்டலான ஆட்டத்தினால் CSK அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தூபே 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும், ஜடேஜா 17 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 25 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இதன்படி IPL 2024 சீசனின் முதல் வெற்றியை CSK அணி தனதாக்கியது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...