Sportsமுதல் வெற்றியை பதிவு செய்தது CSK - IPL 2024

முதல் வெற்றியை பதிவு செய்தது CSK – IPL 2024

-

2024 IPL தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களும் விளாசினர். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியில், தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 15 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார்.

ரஹானே 19 பந்துகளில் 27 ஓட்டங்களும், மிட்செல் 22 ஓட்டங்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா, தூபே சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இருவரின் மிரட்டலான ஆட்டத்தினால் CSK அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தூபே 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும், ஜடேஜா 17 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 25 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இதன்படி IPL 2024 சீசனின் முதல் வெற்றியை CSK அணி தனதாக்கியது.

Latest news

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...