Sportsமுதல் வெற்றியை பதிவு செய்தது CSK - IPL 2024

முதல் வெற்றியை பதிவு செய்தது CSK – IPL 2024

-

2024 IPL தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஆர்சிபி அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களும் விளாசினர். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் முஸ்தஃபிசூர் 4 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியில், தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் 15 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட ரச்சின் ரவீந்திரா 15 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்தார்.

ரஹானே 19 பந்துகளில் 27 ஓட்டங்களும், மிட்செல் 22 ஓட்டங்களும் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஜடேஜா, தூபே சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இருவரின் மிரட்டலான ஆட்டத்தினால் CSK அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தூபே 28 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும், ஜடேஜா 17 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 25 ஓட்டங்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

இதன்படி IPL 2024 சீசனின் முதல் வெற்றியை CSK அணி தனதாக்கியது.

Latest news

பெண்களுக்கான பணிக்குத் திரும்பும் குயின்ஸ்லாந்து அரசாங்க நிதிகள்

பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புர்காவை தடை செய்வதற்கான திட்டம்

பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார். அவர்...

ஆஸ்திரேலியாவின் நம்பகமான நண்பராக மாற அமெரிக்கா தயார்

ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...

ஆஸ்திரேலியாவின் உலக பாரம்பரிய தளங்களுக்கு என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்ட நான்கு இயற்கை தளங்களின் நிலை 2020 முதல் குறைந்துள்ளது. இந்த உயிரினங்களுக்கான பாதுகாப்பு முயற்சிகள் குறைந்துவிட்டன என்பதை சர்வதேச இயற்கை...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் வறுமை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW) மற்றும் ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில் (ACOSS) நடத்திய...

Qantas ஹேக்கர்கள் குறித்த அரசாங்கத்தின் முடிவு

Qantas வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செலுத்தத் தயாராக இல்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 5.7 மில்லியன் Qantas வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட...