Sports63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை - IPL 2024

63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை – IPL 2024

-

IPL தொடரின் நேற்றைய 7-வது லீக் போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் ஆகியோர் 46 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான கில் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் இறங்கினார். சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹாவுக்கு பவுன்சர் பந்தை வீசி தலையில் அடிபட வைத்த தீபக் சாஹர் அடுத்த பந்திலேயே அவரது (21) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12, மில்லர் 21 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினர்.

பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை எடுத்தது.

இதனால் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

நன்றி தமிழன்

Latest news

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் போராட்டம்

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தியுள்ளது. பிணை முறையை மாற்றுவதற்கான வாக்குறுதியை செயல்படுத்துமாறு அவர்கள் விக்டோரியா அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். விக்டோரியாவின் பெண்டிகோவில்...

ரஷ்யாவின் எச்சரிக்கைகளுக்கு நாங்கள் பயப்படவில்லை – பிரதமர் அல்பானீஸ்

ரஷ்ய எச்சரிக்கைகளுக்கு அஞ்சவில்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது. உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் பணியை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள், சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையின் போது நடந்த கொலைகளுடன் தொடர்புடையவை. ஹாங்காங்கிலிருந்து திரும்பிய...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...

ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு வருகையாளர் விசாவில் வந்த பிறகு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...